samzul a rasheed
எதிர்வரும் பாராளுமன்ற ஆசனத்தினை நோக்கி படையெடுத்து இருக்கும் வேட்பாளர்களும் தங்களது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவும். மக்களும் வேட்பாளர்களும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் சமூகத்திற்காக வேட்பாளர்களும் சமூகத்தின் உண்மைக் குரலாக இருக்கக் கூடிய பிரதி நிதியினையும் மக்கள் தெரிவு செய்ய வரவிருக்கும் பொதுத்தேர்தலை மையமாகக் கொண்டு நகர்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.
உண்மையில் இத்தேர்தல் களமானது முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததொரு தேர்தல் ஆகும். ஏனெனில் சென்ற ஆட்சியில் முஸ்லிம் சமூகம் பாரிய இன்னல்களை அனுபவித்திருந்தது மேலும் நாம் தெரிவு செய்ய. பிரதிநிதிகளும் பராமுகமாகவே இருந்தனர்.இவற்றையெல்லாம் கருத்தில் வைத்தே இம்முறை சிந்தித்து செயற்படும் எம் சமூகம்.:
இவை ஒரு புறம் இருக்க முஸ்லிம் தலைமைகளைப் பார்க்கும் போது காலத்திற்கு காலம் மாறாதா வசைபாடுதலையே கையில் எடுத்துக் தங்களது தேர்தல் பிரச்சார மேடைகளை தேர்தல் விபச்சார மேடைகளாக்கின்றனர், இதற்கு நாம் வெட்கித் தலை குனிய வேண்டுமே தவிர கரகோஷம் அல்ல
முஸ்லிம் சமூத்தின் மத்தியில் இன்று கடும் போட்டி போடுகின்ற கட்சிகளாக மு.கா உம் அ.இ.ம.கா திகழ்கின்றன தேர்தல் களமாகிய இத் தருவாயில் முஸ்லிம்தலைமைகளாகிய. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும் அவரின் ஆதரவாளர்களும் மேலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ரஊப் ஹக்கீமும் அவர்களின் ஆதரவாளர்களைப் பார்க்கும் போது முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்து அரசியல் விபச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.
இன்று தேர்தல் பிரச்சார மேடைகளில் நடப்பது தேர்தல் பிரச்சாரமா?
இல்லை நம் சமூகத்தை காட்டிக் கொடுத்தல்லவா அரசியல் செய்ய முற்படுகின்றனர்.மக்கள் நலன் சமூக நலன்களா பிரச்சார மேடைகளில் ஆராயப் படுகின்றன . இல்லை மாறாக. மு.கா. ஆதரவாளர்கள் அ.இ..கா. விமர்சித்தும் அ.இ.ம.கா. ஆதரவாளர்கள் மு.கா விமர்சனம் செய்தும் அரசியல் நடத்துகின்றனர் .
அரசியலில் காட்டிக் கொடுத்து பிரச்சாரம் இங்கு அரசியல் விபச்சாரங்களாக மாற்றப் படுகின்றது.:
@ மக்கள் பிரச்சினை பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.
@ உங்கள் வாக்குறுதிகளை முன் வையுங்கள்
@ உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பற்றிப் பேசுங்கள்
@ பாராளுமன்றில் மக்களுக்காக எப்படி குரல் எழுப்பப் படும் என்பதை தெளிவு படுத்துங்கள். [இன்னும் உள்ளது…
இவ்வாறு எல்லாம் இருக்க பிரச்சார மேடைகளில் பிரச்சாரம் செய்ய ஆனால் பிரச்சார மேடையெல்லாம் என்னுடைய சமூகம் இப்படித்தான் நாமும் அப்படித்தான் என்று ஒரு பக்கத் தரப்பு சொல்ல மற்றத்தரப்பு இல்லை நான் இப்படித்தான் நம் சமூகம் அப்படித்தான் என்று மாறி மாறி சமூகத்தை காட்டிக் கொடுக்கின்றனர்.: அரசியல் விபச்சார மேடையாக்கின்றனர்.
இதிலும் சின்னப்பிள்ளைத்தனமாகவே உள்ளது அண்மையில் நடந்த விடயம் மு.கா கூட்டத்தில் ரஊப் ஹக்கீம் கூறுகின்றார். ‘அ.இ.ம.கா. யில் போட்டியிடும் வேட்பாளர் உபவேந்தர் இஸ்மாயிலை வென்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது’ என்றும்] அதற்கு ‘உபவேந்தர் இஸ்மாயில் அவர்கள் ‘நான் போனால் ரஊப் ஹக்கீம் வீட்டுக்கு போவாறா? இவற்றை பார்க்கும் போது மக்களை மடையர்களாக்க நினைக்கிறார்கள் போலும் ,
இங்கு வேட்பாளர்களாக இருக்கிற அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நன் னோக்கிளேயே களம் இறங்கியுள்ளனர்: நீங்கள் ஒருவரையோருவர் காட்டிக் கொடுத்து முஸ்லிம் சமூகத்தையை புதைகுழியில் தள்ளி அரசியல் விபச்சாரம் செய்ய எத்தனிக்க வேண்டாம்
0 Comments