எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள
கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார
தெரிவித்துள்ளார்.
உரிய பாடசாலைகளுக்கு தபால் மூலம் நேற்றிரவு (06) அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வனுமதிப்பத்திரத்துடன் நேர அட்டவணையும் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நேர அட்டவணையை மாணவர்கள் http://www.doenets.lk/exam/downloads.jsf எனும் முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
click this link – exam time table


0 Comments