ஒவ்வொரு வருஷ ரமளான்/ பெருநாள் பிறையையும் சவுதியில் இவர் ஒருத்தரேதான் பார்க்கிறார்.
அரசு அதற்கென்றே நியமித்த அதிகாரிகளுக்கும் கூட தெரியாத பிறை…
ரியாத் அருகே சுதைர் எனும் சமவெளியில் அமைந்துள்ள ஊர்க்காரரான இவருக்கு மட்டும் தெரியும் காணவியலாத சர்ச்சைக்குரிய பிறை…
ஏனைய சவுதியில்… மேற்கில் மலைப்பிரதேசத்தில் வாழுவோர் உட்பட வேறு யாருக்குமே தெரிவதில்லை… அப்பிறை..!
எனில்…
இவரின் கண்கள் மட்டும் டெலஸ்கோப்பால் செய்யப்பட்டவையா..?!இல்லை…
அய்யா…. சக்திவாய்ந்த டெலெஸ்கோப் உபயோகிக்கிறார்.
ஆனாலும்…
டெலெஸ்கோப்பில்கூட பார்க்க முடியாத பிறையையும் பார்த்துவிடுகிறார். அதனால்தான் உலகில் அறிவியல் மற்றும் வானியல் வல்லுனர்கள் மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.
கண்ணால் பிறை பார்த்த பிறகே மாதத்தை துவக்கும் இந்தியர்களும் மற்ற உலக நாடுகளும் ஒவ்வொரு முறையும் ஒருநாள் பெருநாளில் சவுதியை எப்போதுமே பின்தங்குகிறார்கள்.

0 Comments