ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் வேட்புமனு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
இந்தத் தகவலை குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ அல்லது சுதந்திரக் கட்சி அல்லாத வேறு கட்சியிலோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் மஹிந்தவின் தலைமையில் இன்றிரவு இடம்பெறவுள்ள முக்கிய கூட்டமொன்றின் போது இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


0 Comments