Subscribe Us

header ads

இனவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்யக் கூடாது– தேர்தல் ஆணையாளர்


இனவாத அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையாளர் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடம் கோரியுள்ளார்.

இனவாத அல்லது மதவாதத்தை தூண்டும் வகையில் வாக்கு சேகரிப்பது தடை செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு தரப்பினரம் இவ்வாறு பிரச்சாரம் செய்யக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

மத வழிபாட்டுத் தலங்களில் கட்சிக் காரியாலயங்கள் அமைக்கப்பட முடியாது எனவும், மத வழிபாட்டுத் தலத்தின் தலைவரோ அல்லது உறுப்பினரோ போட்டியிட்டாலும் அவ்வாறு காரியாலயம் அமைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments