Subscribe Us

header ads

20 ஓவர் தொடரை கைப்பற்றுமா இலங்கை


இலங்கை - பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 2 போட்­டி­கள்­கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரை இலங்கை அணி வெல்­லுமா என்­ப­துதான் இப்­போது அனைத்து கிரிக்கெட் ரசி­கர்­க­ளி­னதும் எதிர்­பார்ப்பாக இருக்கிறது.
பாகிஸ்தான் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளை­யா­டி­யது. ஒருநாள் தொடரின் கடை­சிப்­போட்டி நேற்­று­முன்­தினம் ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நடை­பெற்­றது. இந்­தப்­போட்­டியில் இலங்கை அணி 165 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் பாகிஸ்­தானை வீழ்த்தி வெற்­றி­பெற்­றது.
இதில் அதி­ர­டியை வெளிப்­ப­டுத்­திய குஷல் பெரேரா 116 ஓட்­டங்­களை விளா­சினார். மறு­மு­னையில் தில்ஷான் 62 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் இறு­தி­வரை ஆட்­ட­மி­ழக்­காமல் 70 ஓட்­டங்­களைப் பெற்றார். இறு­தியில் இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 368 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.
பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் 37.2 ஓவர்­களில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 203 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்றும் 165 ஓட்­டங்­களால் தோல்­வி­ய­டைந்­தது. ஆனாலும் பாகிஸ்தான் 3–2என்ற அடிப்­ப­டையில் தொட ரைக் கைப்­பற்­றி­யது.
இந்­நி­லையில் இரு அணி­க­ளுக்­கு­மி­டையில் எதிர்­வரும் 30ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது 20 ஓவர் கிரிக்கெட் தொடர். இதன் இரண்­டா­வது போட்டி செப்­டெம்பர் 1ஆம் திகதி நடக்­கி­றது. இவ்­விரு போட்­டி­களும் கொழும்பு ஆர். பிரே­ம­தாஸ மைதா­னத்­தில்தான் நடக்­கி­றன.
இந்தப் போட்­டி­க­ளுக்­காக இலங்கை அணியில் 5 புது­முக வீரர்­கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். இந்த அணியில் பினுர பெர்­னாண்டோ (வேகப்­பந்து வீச்­சாளர்), தசுன் ஷானக (சக­ல­துறை ஆட்­டக்­காரர்), ஜெப்ரே வந்­தேர்சாய் (சுழற்­பந்து வீச்­சாளர்), ஷேகன் ஜய­சூர்ய மற்றும் தனஞ்­ஜய டி சில்வா (துடுப்­பாட்ட வீரர்கள்) ஆகியோர் புது­முக வீரர்­க­ளாக அறி­மு­க­மா­கின்­றனர்.
லசித் மாலிங்க அணித் தலை­வ­ராக செயற்­ப­டு­கின்றார். அதேபோல் அனு­ப­ வீரர் தில­க­ரத்ன டில்ஷான், குஷால் பெரேரா, கித்­ருவான் விதா­னகே, தனஞ்­ஜய டி சில்வா, மெத்யூஸ், தசுன் ஷானக, சாமர கபு­கெ­தர, ஷேகன் ஜய­சூரிய, திசர பெரேரா, ஜெப்ரே வந்­தேர்சாய், நுவன் குல­சே­கர, பினுர பெர்­னாண்டோ, சத்­து­ரங்க டி சில்வா, மலிந்த சிறி­வர்­தன ஆகியோர் அணியில் இடம்­பெற்­றுள்­ளனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதி­ரான கடை­சியும் ஐந்­தா­வ­து­மான ஒருநாள் போட்­டியில் லசித் மாலிங்க அணியில் இடம்­பெ­ற­வில்­லை­யென்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தத் தொடரின் முத­லா­வது 20 ஓவர் போட்டி ஜூலை 30ஆம் திக­தியும்இ 2ஆ-வது போட்டி ஆகஸ்ட் மாதம் 1ஆம் திக­தியும் நடை­பெ­ற­வி­ருக்­கி­றது.
ஏற்கனவே பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் இழந்துள்ள இலங்கை அணி 20 ஓவர் தொடரை நிச்சயம் கைப்பற்றியாக வேண் டும் என்பதுதான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Post a Comment

0 Comments