Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: ஜூலை 04


1810: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரை பிரான்ஸ் கைப்பற்றியது. 

1837 உலகின் நீண்ட தூர ரயில்சேவை பிரிட்டனின் பேர்மிங்ஹாம் , லிவர்பூல்நகரங்களுக்கிடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

1903: ட்ரோதி லெவிட் என்பவர் மோட்டார் பந்தயப் போட்டியில் பங்குபற்றிய முதல் பெண்ணானார். 

1918: ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலஸ் சார் மன்னரும் அவரின் குடும்பத்தினரும் போல்ஸ்விக் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர். 

1941: உக்ரேனில் கைது செய்யப்பட்ட போலந்து விஞ்ஞானிகளும் எழுத்தாளர்களும் ஜேர்மனியின் நாஸி படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். 

1946:  381 வருடங்கள் பல நாடுகளின் காலனி நாடாக இருந்த பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிடமிருந்து முழுiயான சுதந்திரம் பெற்றது. 

1947: இந்தியா, பாகிஸ்தான் எனும் இரு சுதந்திர நாடுகளை உருவாக்குவதற்கான பிரேரணை இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 

1966: அமெரிக்காவில் தகவல் சுதந்திர சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் கையெழுத்திட்டார். 

1976: கடத்தப்பட்டு உகண்டாவின் எண்டபே விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எயார் பிரான்ஸ் விமானத்தையும் 248  பயணிகளையும்12 ஊழியர்களையும்மீட்கும்  அதிரடி நடவடிக்கையை இஸ்ரேலிய கமோண்டோக்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். 260 பணயக்கைதிகளில் நால்வரும் கொமாண்டோக்களில்ஒருவம் பலியாகினர். கடத்தல்காரர்கள் 7 பேரும் உகண்டா படையினர் படையினர் 45 பேரும் பலி. 

1997: செவ்வாய் கிரகத்தில் நாஸாவின் பாத் பைண்டர் விண்கலம் தரையிறங்கியது. 

Post a Comment

0 Comments