Subscribe Us

ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு இன்னும் எதுவும் மிச்சம் இல்லை - ராஜித்த சேனாரத்ன


நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு இன்னும் எதுவும் மிச்சம் இல்லை என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரோ அல்லது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுவோ அல்லது தேசியப் பட்டியல் வாய்ப்போ வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments