தனது விலை உயர்ந்த பஜிரோ வாகனத்தை சாதாரண முச்சக்கரவண்டியொன்று முந்திச் செல்வதா என ஆத்திரப்பட்ட ஆசாமியொருவர், முச்சக்கரவண்டி சாரதியை அடித்துஈ அவரது பல்லை உடைத்துள்ளார்.
இந்த விசித்திர சம்பவம் நேற்று கம்பளை – நாவலப்பிட்டி வீதியில் நடந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று தனது பஜிரோ வாகனத்தில் சென்ற இந்த ஆசாமி, தொலைபேசியில் உரையாடியபடி மெதுவாக செலுத்திக் கொண்டு சென்றுள்ளார். சனநாடமாட்டம் குறைந்த அந்த சமயத்தில், பின்னால் வந்த முச்சக்கரவண்டியொன்று அவரை கடந்து சென்றுள்ளது.
பஜிரோ ஆசாமிக்கு சுருக்கென கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. தனது விலையுயர்ந்த வாகனத்தை சாதாரண வாகனம் முந்திச் செல்வதா என கொதித்தவர், துரத்திச் சென்று முச்சக்கரவண்டியை வழிமறித்துள்ளார்.
தனது வாகனத்தை எப்படி நீ கடந்த செல்வாய் என கேட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் இதில் முச்சக்கர வண்டி சாரதி பற்கள் உடைந்து படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள இந்த விசித்திர ஆசாமியை பொலிசார் தேடி வருகின்றனர்.


0 Comments