Subscribe Us

header ads

முதலாம் திகதி மஹிந்தவின் முக்கிய அறிவிப்பு


எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்தல் குறித்து மிக முக்­கி­ய­மான அறி­வித்தல் ஒன்­றினை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ விடுக்­க­வுள்ளார்.
ஜூலை மாதம் முதலாம் திகதி புதன் கிழ­மை­யன்று இந்த அறி­விப்பு வெளியி டப்படும் என்றும் விஷே­ட­மாக பாரா­ளு­மன்ற தேர்தல் குறித்த தனது நிலைப்­பாட்டை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இதன் போது மஹிந்த ராஜ­பக்ஷ அறி­விக்க உள்­ளதா­கவும் முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஊடகப் பேச்­சாளர் ரொஹான் வெலி­விட்ட கேச­ரிக்கு தெரி­வித்தார்.
அம்­பாந்­தோட்டை, மெத­மு­ல­னையில் உள்ள முன்னாள் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் வைத்து காலை 10.00 மணிக்கு இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­படும் என குறிப்­பிட்ட முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஊடகப் பேச்­சாளர், இதன் போது பல முன்னாள் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். அர­சியல் பிர­மு­கர்­க­ளுக்கு மேல­தி­க­மாக முன்னாள் ஜனா­தி­பதி தனது அறி­விப்பை வெளி­யிடும் போது அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் மெத­மு­ல­னவில் ஒன்று கூடுவர் எனவும் ரொஹான் வெளி­வி­ட்ட குறிப்­பிட்டார்.
இது தொடர்பில் அவர் மெலும் தெரி­வித்­த­தா­வது,
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ செயற்­பாட்டு அர­சி­ய­லுக்கு வரு­வாரா இல்­லையா என்­பது குறித்து ஒவ்­வொரு அர­சியல் வாதியும் தத்­த­மது கருத்­துக்­க­ளையும் ஊகங்­க­ளையும் வெளி­யிட்டு வரு­கின்­றனர். அதே போன்று இன்னும் பல விட­யங்கள் குறித்தும் பல இணை­யத்­த­ளங்கள் ஊடாக பல்­வேறு வதந்­திகள் பரப்­பப்­ப­டு­கின்­றன. இவை அனைத்­திற்கும் ஜூலை முதலாம் திகதி பதில் கிடைக்கும்.
விஷே­ட­மாக எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்தல் குறித்த முக்கியமான தீர்மானம் அல்லது தனது நிலைப்பாட்டினை இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளார். என்றார்.
இதேவேளை தேர்தல் தொடர்பில் நான் என்ன இறுதி முடிவு எடுத்துள்ளேன் என்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிந்து கொள்ள முடியுமென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டி தலதாமாளிகைக்கு சென்று மதவழிபாடுகளில் கலந்துகொண்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments