Subscribe Us

header ads

சாய்ந்தமருதுவில் நாளை ஹர்த்தால்


சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது ஜூஆம் பெரிய பள்ளிவாசல் வர்த்தக சங்கம் மற்றும் நிறுவனங்கள் பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொது மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கான அழைப்பை விடுத்து இந்த அமைப்பினால் பிரதேசம் எங்கும் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை திங்கட்கிழமை அனைத்து வர்த்தக நிலையங்கள் கடைகள் அரச தனியார் நிறுவனங்கள் பாடசாலைகள் அனைத்தையும் திறக்காதிருப்பதுடன் பொது மக்கள் அனைவரும் அன்றைய தினம் காலை 7.30மணிக்கு சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு அணிதிரண்டு வருமாறும் மேற்படி அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பள்ளிவாசலில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை பிரகடனம் செய்யப்பட்டு விசேட தொழுகையும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய உறுதியளித்து பல மாதங்களாகியும் அது இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் கல்முனைத் தொகுதியின் அரசியல் தலைமையும் தடையாக இருக்கின்றன என்று குற்றம் சாட்டப்படுகின்றது.
இவர்கள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள போதிலும் அதனை மழுங்கடிக்கும் வகையில் தம்மை ஏமாற்றும் வகையில் செயற்படுவதாகவும் இனிமக்களே தீர்ப்பாளர்களாக மாறுவார்கள் எனவும் தெரிவித்து பள்ளிவாசல் நிர்வாகம் இரண்டு பக்க துண்டுப்பிரசுரம் ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் மக்களுக்கு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments