Subscribe Us

header ads

நாட்டிற்கு தேசிய கொள்கை அவசியம்!- ஜனாதிபதி


நாட்டுக்கு தேசிய கொள்கை அவசியம் எனவும் இந்தியாவில் அரசாங்கங்கள் மாறினாலும் அதன் தேசிய கொள்கைகள் மாறுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேவைக்கு அமைய இந்தியாவில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இப்படியான தேசிய கொள்கையின் முக்கியத்துவம் பற்றி அரசியல்வாதிகளுக்கு கற்றுக்கொடுப்பது புத்திஜீவிகளின் பொறுப்பாகும்.

இன்னும் கொஞ்ச நாட்களில் புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும். புதிய அமைச்சரவையில் 30 பேர் மாத்திரமே அங்கம் வகிப்பர்.

30 அமைச்சுக்களை வர்த்தமானியில் அறிவித்த பின்னர், தேசிய கொள்கைக்கான கட்சிகளின் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்ளுமாறு புத்திஜீவிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான யுக மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஓரளவு தேசிய கொள்கை இருந்தது.

எனினும் கடந்த சில தசாப்தங்களாக அப்படியான தேசிய கொள்கைக்கு தடையேற்பட்டது. அரசாங்கங்கள் மாறிய போது சில நல்ல கொள்கைகளை கூட ஏற்றுக்கொள்ளாத நடவடிக்கைகள் இடம்பெற்றன எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments