கொழும்பு நகரின் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்தி, கொழும்பின் சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தி அலங்கரிக்குமாறு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டு வரப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும், அமைச்சர் ஹக்கீம் குழுவினருக்குமிடையில் அண்மையில் இது தொடர்பில் ஒரு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments