Subscribe Us

header ads

புங்குடுதீவு மாணவியின் கொலை : எந்தவகையிலும் நியாயப்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது - சம்பிக்க


புங்­கு­டு­தீவு மாண­வியின் கொலையைக் கண்­டித்து வடக்கில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் வன்­மு­றை­களை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்த வேண்டும். வடக்கில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் அசா­தா­ரண சூழலின் பின்­ன­ணியில் வேறு சிலரின் சூழ்ச்­சிகள் உள்­ள­தாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். இக் குற்­றச்­சாட்­டுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் எப்­ப­டி­யேனும் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள். ஆனால் பொது­மக்கள் சட்­டத்தை கையில் எடுக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

புங்­கு­டு­தீவு மாணவி கொலை­யுடன் தொடர்­பு­ப­டுத்தி வடக்கில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,
புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலை மனி­தா­பி­மா­ன­மற்ற வகையில் நடந்­தே­றி­யுள்­ளது. பாட­சாலை மாணவி மீதான வல்­லு­றவு மற்றும் அவரை கொலை செய்­த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் அனை­வ­ருக்கும் தக்க தண்­ட­னையை அர­சாங்கம் பெற்றுக் கொடுக்கும். அதேபோல் பாதிக்­கப்­பட்ட மாண­வியின் குடும்ப சூழ­லையும் அர­சாங்கம் கவ­னத்தில் கொள்ளும்.
இந்த சம்­பவம் மிகவும் மோச­மா­ன­தொரு விடயம். ஆயினும் இவ் விட­யத்தில் சட்­டப்­படி தண்­ட­னை­களை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டுமே தவிர பொது மக்கள் சட்­டத்தை கையில் எடுக்­கக்­கூ­டாது. அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு அமைய பொலிஸ் மற்றும் பாது­காப்பு படை­யினர் தமது கட­மை­களை சரி­வரச் செய்­து­வ­ரு­கின்­றனர். குற்­ற­வா­ளிகள் என்ற சந்­தே­கத்தில் ஒன்­பது நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
இந்­நி­லையில் அவர்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றது. அவர்கள் குற்­ற­வா­ளிகள் என உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் சட்­டத்­திற்கு அமைய தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். ஆனாலும் இந்த சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாக வைத்து வடக்கில் வேறு வித­மான நட­வ­டிக்­கைகள் தலை தூக்­கி­யுள்­ளன. வடக்கில் கடை­ய­டைப்­புகள் மற்றும் ஹர்த்தால் செயற்­பா­டுகள் மக்­களால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­மைக்கு பின்­ன­ணியில் வேறு சிலரின் அழுத்­தங்கள் அமைந்­துள்­ளன.
வடக்கில் வாழும் சிங்­கள மக்­களை அங்­கி­ருந்து வெளி­யேறக் கோரி அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­துடன் பயங்­க­ர­வாத மற்றும் பிரி­வி­னை­வாத செயற்­பா­டு­களை மீண்டும் வடக்கில் பரப்­பு­வ­தற்­கான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எனவே இவற்றை உட­ன­டி­யாக கட்டுப் படுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை பாது­காப்பு பிரி­வினர் மேற்­கொள்ள வேண்டும். வடக்கில் வன்­முறை சம்­ப­வங்­களை மேற்­கொள்ளும் நபர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.
மாண­வியின் கொலையை எந்த வகை­யிலும் நியா­யப்­ப­டுத்தி குற்­ற­வா­ளிகள் தப்­பிக்க முடி­யாது. ஆனால் அதை காரணம் காட்டி பொது மக்கள் சட்­டத்தை கையில் எடுப்­ப­தற்கு எந்த உரி­மையும் இல்லை. எனவே வடக்கில் நடந்­து­வரும் அசா­தா­ரண சூழலை உட­ன­டி­யாக கட்­டுப்­ப­டுத்த வேண்டும். வடக்கில் வாழும் மக்­களின் நிலை­மை­களை குழப்பும் வகையில் ஒரு சிலர் தூண்­டு­தல்­களை மேற்­கொள்­கின்­றனர். வேறு ஒரு சிலர் எய்­துள்ள அம்பு புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்பு படுத்தப்பட்டு பிரிவினைவாதத்துக்கான சூழ்ச்சியை பலப்படுத்தியுள்ளது.
வடக்கில் பிரிவினைவாதத்துக்கான இறுக்கமான முடிச்சை போட முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. அதை உடனடியாக கட்டுப் படுத்த வேண்டும். வடக்கில் பாது காப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் குறிப் பிட்டார்.

Post a Comment

0 Comments