Subscribe Us

header ads

க.பொ.த சா/த பரீட்சைக்கு இன்றிலிருந்து விண்ணப்பிக்க முடியும்


இவ் வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சாத்திகள் இன்றிலிருந்து (20) ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரை விண்ணபிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பாடசாலை பரீட்சாத்திகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விண்ணப்ப படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து குறித்த திகதிக்கு முன்னர் அதிபர் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட பரீட்சாத்திகள் மாதிரி விண்ணப்படிவத்திற்கு அமைய தமது விண்ணப்பங்களை நிரப்பி உரிய திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். குறித்த திகதிக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.-et-

Post a Comment

0 Comments