Subscribe Us

header ads

முன்னாள் ஜனாதிபதியை புகழ்ந்துரைத்த ஜனாதிபதி மைத்திரிபால!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கேந்திர நிலையத்தை இன்று பார்வையிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கேந்திர நிலையத்திற்கு 20 வருடங்களின் பின் ஜனாதிபதி ஒருவர் விஜயம் செய்துள்ளமை இதுவாகும்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன கேந்திர நிலையத்தின் நிலைமையை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்குள்ள நூதனசாலையையும் பார்வையிட்டுள்ளார்.

ஊழியர்களுடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனவின் செயற்பாடுகளையும் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

Post a Comment

0 Comments