Subscribe Us

header ads

ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 30 வீதத்தினை இன்று முதல் பெறலாம் : தொழில் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன


ஊழியர் சேம­லாப நிதி­யத்தின் அங்­கத்­த­வர்கள் தமது வைப்­பி­லி­ருக்கும் தொகையில் 30 வீதத்­தினை 55 வய­துக்கு முன்­பாக மீளப் பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய திட்டம் ஒன்றை இன்று முதல் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தொழில் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரி­வித்தார்.

தொழில் அமைச்சின் செய­ல­கத்தில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
ஊழியர் சேம­லாப நிதி­யத்தின் அங்­கத்­த­வர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தமது வைப்பி­லுள்ள தொகையில் 30 வீத­மான தொகை­யினை 55 வய­துக்கு முன்­பாக மீளப்­பொறும் திட்­ட­மொன்­றினை தொழில் அமைச்சு (இன்று) முதல் அறி­முப்­ப­டுத்­தி­யுள்­ளது.
இதன் முலம் அதி­க­பட்­ச­மாக 2 மில்­லியன் ரூபா­வை பெற்றுக் கொள்ள முடியும்.அத்­துடன் முன்பு போல் இல்­லாது 25 வயது முதலே தமது வைப்பி­லுள்ள பணம்இவேறு பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்துக் கொள்ள முடி யும்.
இத்­திட்­டத்­திற்கு உள்­வாங்­கப்­ப­டு­ப­வர்கள் 10 வரு­டங்­க­ளுக்கு குறை­யாது ஊழியர் சேம­லாப நிதி­யினை செலுத்­தி­யி­ருக்க வேண்டும், தற்­போது சேவையில் இருத்தல் வேண்டும்இதனிப்­பட்ட கணக்கில் 3 இலட்சம் ரூபா வைப்­பி­லி­ருக்க வேண்டும் என்ற நிபந்­த­னை­களும் இடப்­பட்­டுள்­ளது.
தொழில் அமைச்சின் அலு­வல­கங்கள் முன்­பாக புதி­தாக பொருத்­தப்­பட்­டுள்ள இயந்­தி­ரத்தின் உத­வி­யுடன் தமது வைப்பு தொடர்­பி­லான விப­ரங்­களை அறிந்து கொள்ள கூடி­ய­வாறு சேவைகள் இன்னும் 3 மாத காலத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.
வீட­மைப்பு திட்­டத்­திற்­காக பணம் பெறு­ப­வர்கள் அவர்­க­ளது பெயரில் எழு­த­ப்பட்­டுள்ள காணி உறுதிஇபிரே­தேச சபை அல்­லது உள்ளூ­ராட்சி சபையின் அங்­கீ­காரம் பெற்று அமைக்­கப்­பட­வுள்ள வீட்­டிற்­கான வரை­படம்,வீடு கட்­டு­வ­தற்­கான இடத்தின் சொத்­தாண்­மையை உறு­திப்­ப­டுத்த பிர­சித்த நொத்­தா­ரிசு ஒரு­வரின் கையொப்பம், வீடு கட்­டு­வ­தற்­கான இடம் அவ­ருக்கு சொந்­த­மில்­லா­விடின் வீட்டுக் காணியை விற்­பனை செய்­ப­வரின் சம்­மதம் தெரி­விக்கும் கடிதம் மற்றும் அவ­ரது மரவு வழி அறிக்­கையின் பிரதி , உரித்து அறிக்­கையின் பிரதி என்­பன நிதி­யத்­திற்கு சமர்ப்பிக்­கப்­படல் வேண்டும்.
மாறாக வைத்­திய தேவைக்­காக பணம் பெறு­ப­வர்கள் அரச அல்­லது தனியார் வைத்­தி­ய­சா­லையின் பொறுப்­ப­தி­காரி ஒருவரால் அல்லது வைத்திய அதிகாரியால் சான்றிதழ் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பணம் பெறுபவரின் மனைவி, பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வைத்திய சான்றிதழ் என்பன சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments