Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: மே 17


1590: டென்மார்க்கை சேர்ந்த இளவரசி ஆன், ஸ்கொட்லாந்து மகாராணியாக முடிசூடப்பட்டார். 

1792: நியூயோர்க் பங்குச் சந்தை திறக்கப்பட்டது. 

1914: நோர்வே மன்னராக டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் கிறிஸ்ரியன் பிரெட்ரிக், நோர்வே நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். 

1865: சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது. 1940: பெல்ஜியம் மீது ஜேர்மனி படையெடுத்தது. 

1980: தென்கொரிய அரசாங்கம் ஜெனரல் சுன் டூ ஹ்வானின் கட்டுப்பாட்டில் வந்தது. 

1983: லெபனானிலிருந்து இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெறப்படுவது தொடர்பாக, லெபனான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டது. 

1990: உளவியல் நோய்களின் பட்டியலிலிருந்து ஓரின சேர்க்கையை உலக சுகாதார ஸ்தாபனம் நீக்கியது. 

1997: லோரன்ட் கபீலாவின் படைகள் ஸயர் நாட்டின் தலைநகர் கின்ஷசாவுக்குள் பிரவேசித்தன. அந்நாட்டிற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

1998: தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 

2007: வட கொரியா, தென் கொரியாவுக்கிடையில் முதல் தடவையாக ரயில் சேவைகள் இடம்பெற்றன. 

2014: வடக்கு லாவோஸில் இடம்பெற்ற விமான விபத்தில் 17 பேர் பலியாகினர். 

Post a Comment

0 Comments