ஜவ்பர்கான்
முதன் முறையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார்.
மட்டக்களப்பு போதகர் ஒன்றியம் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஸ்கா பண்டிகையில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுவதற்கே ஜனாதிபதி மைத்திரிபால மட்டக்களப்புக்கு விஜயம் செய்கின்றார்.
போதகர் ஒன்றியத்தின் தலைவர் குகன் இராசதுரை தலைமையில் நடைபெறும் இப்பண்டிகை விழாவில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments