அம்பாரை மாவட்ட முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் ஏ.எஜி.முபாரக் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரை முதலமைச்சர் காரியாலயத்தில் சந்தித்து
முகாமைத்துவ உதவியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக அறிக்கை ஒன்றினை சமர்பித்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், சிப்லி பாறூக், ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்போது முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து நினைவுச்சின்னம் ஒன்றினை முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் வழங்கி வைத்தனர்.




0 Comments