எதிர்க் கட்சித் தலைவராக யார் வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதற்காக புற முதுகில் குத்த வேண்டாம் என எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சு பதவிகளில் இருக்கும் போது எதிர்க் கட்சித் தலைவராக செயற்படுவது கடினமானதாகும்.
இதேவேளை எதிர்கட்சித் தலைவராக யாரையும் யாரும் முன்மொழியலாம். இதை நான் தடுக்கப்போவதில்லை. எனினும் சபாநாயகரின் இறுதி தீர்மானத்திற்கு அமையவே நான் செயற்படுவேன் என்றார்.


0 Comments