Subscribe Us

header ads

சுகததாச ஓடுபாதையை நேரில் பார்த்தபோது இதயம் கனத்தது : விளையாட்டுத்துறை அமைச்சர்


‘‘கொழும்பு சுக­ததாச விளை­யாட்­ட­ரங்கின் ஓடு­பா­தையை நேரில் பார்­வை­யிட்­ட­போது எனது இதயம் கனத்­தது. இந்த ஓடு­பா­தையை அமைக்கும் விட­யத்தில் எவ்­வ­ளவு ஊழல் இடம்­பெற்­றுள்­ளது என்­பது ஓடு­பா­தையின் செயற்கை விரிப்­பு­களில் காணப்­படும் சேதங்கள் தெட்­டத்தெ ளிவாக எடுத்­துக்­காட்­டு­கின்­றன’’ என சுற்­று­லாத்­துறை மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திசா­நா­யக்க தெரி­வித்தார்.

சுக­த­தாச உள்­ளக அரங்குஇ வெளி அரங்கு ஆகி­ய­வற்றை நேற்றுக் காலை நேர­டி­யாகப் பார்­வை­யிட்ட அமைச்சர் நவீன் திசா­நா­யக்கஇ வெளிய­ரங்கில் அமைக்­கப்­பட்­டுள்ள பண்­ட­க­சா­லை­யையும் வைப­வ­ரீ­தி­யாக திறந்து­வைத்தார்.
சுக­த­தாச விளை­யாட்டுத் தொகு­தியில் உள்ள விடு­தியின் புன­ர­மைப்புப் பணி­க­ளையும் பார்­வை­யிட்ட அமைச்சர் நவீன் திசா­நா­யக்கஇ ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தனது ஆதங்­கத்தை வெளியிட்டார்.
‘‘கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கின் செயற்கை விரிப்பு ஓடு­பாதை இந்த அளவு சேத­மா­கி­யி­ருக்கும் என நான் நினைக்­க­வில்லை. இந்த செயற்கை விரிப்பில் ஏற்­பட்­டுள்ள சேதங்­களைப் பார்த்­த­போது என் இதயம் கனத்­தது. இதில் எவ்­வ­ளவு ஊழல் இடம்­பெற்­றுள்­ளது என்­பதை இந்த செயற்கை விரிப்பில் காணப்­படும் சேதங்கள் காட்­டு­கின்­றன. இந்த செயற்கை விரிப்பு சிறு­வர்­களின் சொத்து. இந்த ஓடு­பாதை சேத­ம­டைந்­துள்­ளமை என்னை கவலை அடையச் செய்­கின்­றது. புதிய செயற்கை விரிப்பு ஒன்று மிக விரைவில் பதிக்­கப்­படும்’’ என சுக­த­தாச அரங்கில் உள்ள தீப மேடைக்கு அருகில் வைத்து செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் பேசிய அமைச்சர் நவீன் திசா­நா­யக்க குறிப்­பிட்டார்.
‘‘இந்த செயற்கை விரிப்பை பொருத்­திய கஹா­கொல என்ற நிறு­வனம் தற்­போது விலா­ச­மற்றுப் போயுள்­ளது. அந்த நிறு­வ­னத்தின் தொலை­பேசி செய­லி­ழந்­துள்­ளது. இந்த ஆடு­க­ளத்­திற்கு 9 வருட உத்­த­ர­வாத சான்­றிதழ் உள்­ளது. ஆனால்கூட ஒன்­றரை வரு­டங்கள் ஆகாத நிலையில் இந்த ஓடு­பாதை சேத­ம­டைந்­துள்­ளது. இதில் எந்­த­ளவு ஊழல் இடம்­பெற்­றுள்­ளது என்­பது நன்கு புலப்­ப­டு­கின்­றது. இது குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்கு குழு ஒன்றை நிய­மித்­துள்ளேன்’’ என தொடர்ந்து பேசிய அமைச்சர் குறிப்­பிட்டார்.
‘‘சுக­த­தாச விளை­யாட்டுத் தொகுதி விடுதி 40 மில்­லியன் ரூபா செலவில் புன­ர­மைக்­கப்­ப­ட­வுள்­ளது. சில தனியார் நிறு­வ­னங்கள் 3 நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றை அமைப்­ப­தற்கு கோரிக்கை விடுத்­துள்­ளன. அது குறித்து விரைவில் ஒரு முடி­வுக்கு வருவோம். மேலும் டொரிங்டன் மைதா­னத்­திலும் றீட் அவென்யூ மைதா­னத்­திலும் செயற்கை விரிப்பு ஓடு­பா­தைகள் போடப்­படும்’’ என அவர் கூறினார்.
சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கு கால்­பந்­தாட்­டத்­திற்கு 60 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும் கடந்த பல வரு­டங்­க­ளாக கால்­பந்­தாட்டப் போட்­டிகள் முறை­யாக நடத்­தப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மாக கால்­பந்­தாட்­டத்தின் தரம் பின்­ன­டைந்­துள்­ளது. இதனை சீர் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா? என அமைச்­ச­ரிடம் கேட்­ட­போது,
‘‘இலங்கை கால்­பந்­தாட்ட அணி பூட்­டா­னிடம் அடைந்த தோல்வி அதன் வீழ்ச்­சியை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் கால்­பந்­தாட்டப் போட்டிகளை நடத்துவதற்கு அறவிடப்படும் கட்டணம் அதிகமானது. இது கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு கட்டுப்படியாகாது என்பதை நான் அறிவேன். மேலும் கால்பந்தாட்ட நிர்வாகத்திற்குள்ளும் சில சிக்கல்கள் இருக்கின்றன. இவை எல்லாம் விரைவில் தீர்த்துவைக்கப்படும்’’ என அமைச்சர் நவீன் திசாநாயக்க பதிலளித்தார்.

Post a Comment

0 Comments