Subscribe Us

header ads

''அமர முடி­யாது'' எனினும் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார் நவீன்


விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திசா­நா­ய­க்க நேற்­றைய பாரா­ளு­மன்ற அமர்வின் போது பிர­த­ம­ருக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள ஆச­னத்தில் அமர்ந்த சம்­பவம் ஒன்று நிகழ்ந்­தது.
பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆகிய பத­வி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள ஆச­னங்­களில் பிறி­தொரு உறுப்­பி­னரோ அமைச்­சரோ பிர­தி­ய­மைச்­சரோ அமர முடி­யாது என்­பது கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்ற பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­ய­மாகும்.
இந்­நி­லையில் நேற்­றைய அமர்வு இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்த போது பிர­த­ம­ருக்கு அருகில் அமைந்­துள்ள ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஸ்மன் கிரி­யெல்­ல­விடம் ஏதோ பேசு­வ­தற்கு சென்ற விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திசா நாயக்க பிர­த­மரின் ஆச­னத்தில் அமர்ந்­த­வாறு அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்­ல­விடம் சிறுது நேரம் உரை­யா­டி­விட்டு எழுந்து சென்றார்.
இதே­வேளை சிரேஷ்ட உறுப்­பி­ன­ரான அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்­லவும் அமைச்சர் நவீன் பிரதமரின் ஆசனத்தில் அமர்ந்தது பற்றி அறிவுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments