விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பிரதமருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தில் அமர்ந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் பிறிதொரு உறுப்பினரோ அமைச்சரோ பிரதியமைச்சரோ அமர முடியாது என்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற பாராளுமன்ற சம்பிரதாயமாகும்.
இந்நிலையில் நேற்றைய அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பிரதமருக்கு அருகில் அமைந்துள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்லவிடம் ஏதோ பேசுவதற்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசா நாயக்க பிரதமரின் ஆசனத்தில் அமர்ந்தவாறு அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் சிறுது நேரம் உரையாடிவிட்டு எழுந்து சென்றார்.
இதேவேளை சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் அமைச்சர் நவீன் பிரதமரின் ஆசனத்தில் அமர்ந்தது பற்றி அறிவுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments