ரஷ்ய இழுவைக் கப்பலொன்று கம்சட்கா தீபகற்பத்தில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் அதில் பயணம் செய்த 54 மாலுமிகளும் உயிரிழந்துள்ளனர்.
அந்தக் கப்பல் பயணித்த 65 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.அதேசமயம் 15 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.மேற்படி டால்னி வொஸ்டொக் கப்பலில் விபத்து இடம்பெற்ற வேளை 132 பேர் பயணம் செய்துள்ளனர்.
அவர்களில் 78 ரஷ்யர்களும் 42 மியன்மார் பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர். ஏனையவர்கள் வணுவத்து, லத்வியா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
அந்தக் கப்பல் புதன்கிழமை குறுரோகொரோவ்ஸ்கி பிராந்தியத்தின் மேற்கே 330 கிலோமீற்றர் தொலை வில் ஒகொட்ஸ்க் கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இறந்தவர்களில் அந்தக் கப்பலின் கப்டனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப் படுகிறது.இந்நிலையில் காணாமல்போனவர்களை தேடும் பணியில் 26 மீட்புக் கப்பல்கள் சகிதம் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் கடல் கொந்தளிப்பு மற்றும் உறைய வைக்கும் குளிர் காரணமாக மீட்புப் பணிகள் தாமதமாவதாக கூறப்படுகிறது.இந்த கப்பல் விபத்துக்கான காரணம் தொடர்பில் தற்போது எதனையும் உறுதி யாகக் கூறமுடியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


0 Comments