Subscribe Us

header ads

கென்ய பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 பேர் பலி; 79 பேர் காயம்


வட கிழக்கு கென்­யா­வி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­க­மொன்றின் மீது அல்-­- ஷபாப் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 147 பேர் பலி­யா­ன­துடன் 79 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

கரிஸா பல்­க­லைக்­க­ழ­கத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் தாக்­கு­தலின் போது தாக்­கு­தலை நடத்­திய 4 தாக்­கு­தல்­தா­ரி­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
மேலும் அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து சுமார் 587 மாண­வர்கள் தப்பி வந்­துள்­ளனர்.
அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் மீது ஏகே 47 துப்­பாக்­கிகள் சகிதம் தற்­கொலை மேலங்கி அணிந்து வந்த துப்­பாக்­கி­தா­ரிகள் வியா­ழக்­கி­ழமை தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளனர். அவர்கள் அனை­வரும் முக­மூடிகளை அணிந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்தை ஆக்­கி­ர­மித்து அங்­கி­ருந்­த­வர்­களை பண­யக்­கை­தி­க­ளாக பிடித்து வைத்­தி­ருந்த தற்­கொலை குண்­டு­தா­ரி­கள், இறு­தியில் பொலிஸார் முற்­று­கை­யிட்­டதும் குண்­டுகள் போன்று வெடித்துச் சித­றி­ய­தாக அந்­நாட்டு உள்­துறை அமைச்சர் ஜோசப் நகெய்­ஸெரி தெரி­வித்தார்.
பொலிஸார் தம்மை அணு­கிய போது தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் திட்­ட­மிட்டு குண்­டு­களை வெடிக்க வைத்­தார்­களா அல்­லது பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் தன்­னி­யக்க ரீதியில் குண்­டுகள் வெடித்­த­னவா என்­பது அறி­யப்­ப­ட­வில்லை.
இத­னை­ய­டுத்து குறிப்­பிட்ட பல்­க­லைக்­க­ழகம் பாது­காப்புப் படை­யி­னரின் முழு­மை­யான கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.தொடர்ந்து கென்ய, சோமா­லிய எல்­லை­ யி­லுள்ள கரிஸ்ஸா, வஜிர், மன்­டெரா மற் றும் தனா றிவர் ஆகிய 3 பிராந்­தி­யங்­களில் இரவு நேர ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது.
இந்தத் தாக்­குதல் ஒரு தீவி­ர­வாத தாக் குதல் என குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வன்முறை மிக்க தீவிரவாதத்தை தடுப்பதற்கு கென்யாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவத் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.


Post a Comment

0 Comments