Subscribe Us

header ads

திறமை இருந்தால் இராட்சத சுறா ஒன்றை வளர்த்துக் காட்டுங்கள் : கோட்டாபய பகிரங்க சவால்


இராட்சத சுறா வளர்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இயலுமென்றால் அவ்வாறான ஒரு சுறாவை வளர்த்துக் காட்டும்படி சவால் விடுத்துள்ளார்.
 
கொழும்பிலுள்ள சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர் ராஜபக்ஷ சகோதரர்கள் செய்த செயற்பாடுகள் மற்றும் இரகசிய விடயங்கள் தொடர்பான தகவல்கள் ஒவ்வொன்றான வெளிவர ஆரம்பித்தன.
 
இந்த நிலையில் கொழும்பிலுள்ள வீடொன்றில் இராட்சத சுறா ஒன்றை கோட்டாபய ராஜபக்ஷ வளர்த்து வந்ததாகவும், அதற்கு இரையாக சாதாரண மீன்களை இட்டு, அதனை இராட்சத சுறா கடித்து உட்கொள்வதை இரசித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
இது குறித்து கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்றைய நேர்காணலின்போது வினவப்பட்டது.
 
இதற்கு பதிலளித்துள்ள அவர்,
 
நான் அப்படிப்பட்ட இராட்சத சுறா ஒன்றை வளர்க்கவில்லை. அப்படி வளர்த்திருந்தாலும்கூட அது பிறருக்கு இடையூராக இருந்திருக்கமாட்டாது.
 
சுறாவை மீன்தொட்டியில் வளர்த்தாலும், அல்லது எங்கு வளர்த்தாலும் அது இராட்சத சுறாவாக ஏனைய மீன்களைப் பிடித்துச் சாப்பிடும் அளவிற்கு வளரும் என்பது தெரிந்த விடயமாகும்.
 
எனவே அப்படிப்பட்ட ஒரு சுறாவை யாராலும் இலகுவில் வளர்த்துவிட முடியாது. திறமை உள்ளதென்றால் வளர்த்துக் காட்டுங்கள் என்று பதிலளித்துள்ளார் கோட்டாபய

Post a Comment

0 Comments