Subscribe Us

header ads

சிங்கப்பூருக்கான வெளிநாட்டு நாணயக் கடத்தல் முறியடிப்பு


சுமார் 6.5 மில்லியன் ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களை சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முற்பட்ட நபரொருவா் இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
 
35வயதுடைய கொழும்பைச் சேர்ந்த நபரே இன்று அதிகாலை 1.10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
 
சிங்கபூரிற்கு பயணம் செய்வதற்காக வந்தவரது பயணப் பையிலேயே இவ்வாறு நாணயங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இதன் போது அவரின் பயணப்பையில் 29.000 அமெரிக்க டொலர், 7850 யூரோ,  32500 சவூதி ரியால், 4500 டுபாய் தர்ஹம்  மற்றும் 1750 கனடா டொலர் பெறுமதியான நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
இதன் இலங்கை பெறுமதி 6,544,462ரூபா எனவும் இது தொடா்பில்  சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments