-பைஷல் இஸ்மாயில் -
யுனிசப்
அரச சார்பற்ற நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி டாக்டர்
போலா பலன்சியா தலைமையிலான தூதுக்குழு இன்று கிழக்கு மாகாண முதலமைச்ர்
ஹாபீஸ் நசீர் அஹமட்டை சந்தித்தன.
இச்சந்திப்பு இன்று (04)காலை திருகோணமலை, முதலமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த
சந்திப்பின்போது கிழக்கு மாகாண சிறுவர் பாதுகாப்பு , சிறுவர் கல்வி
மற்றும் மேம்பாடு தொடர்பான சமூக நலத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அதன்
முன்னேற்றத்திற்கான வழிகளை அமைத்து கொடுப்பது பற்றி இங்கு
கலந்த்துரையாடப்பட்டன
0 Comments