இஸ்ரேலிய ராணுவத்தில் பனிபுரியும் நபர்கள் பாலஸ்தின சிறுவனை பிடிக்க இரண்டு நாய்களை ஏவி சித்திரவதை செய்யும் வீடியோ பாலஸ்தின மக்களிடையே பெரும்அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிறுவனின் பெயர் ஹம்ஜா அபுஆஷிம் 16 வயது பாலஸ்தினர், கடந்த ஆண்டு டிசம்பரில் சிறுவனை கைது செய்ய நாயை ஏவியதும் மற்ற இஸ்ரேலிய படை நபர் வீடியோ எடுப்பதும், சிறுவன் வலியால் கதறுவதுமாக வீடியோவில் உள்ளது.
சிறுவன் கல் எறிந்ததாக கைது செய்யப்பட்டான், உடலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டது, மற்றும் 6 மாதம் சிறை தண்டனை, 4000 ஷீகல்ஸ் அபராதமும் வழங்கப்பட்டது, இன்று வரை சிறுவன் சிறையில்யுள்ளான்.
சிறுவனின் தந்தை கூறும்போது எனது மகனை நாய்கள் கடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன், எனக்கு தெரியாது இந்த உலகத்தில் தாய் அல்லது தந்தை தங்கள் குழந்தைகளை இந்நிலையில் பார்த்தால் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்று.
இது எங்களின் உள்ளத்தை கடுமையாக பாதித்துள்ளது, என் மகன் உதவியின்றி கத்துகிறான் அதைப்பாற்று இஸ்ரேலியர்கள் கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை இஸ்ரேலிய பாராளிமன்ற அமைச்சர் facebook பக்கத்தில் நேற்று வெளியிட்டான்.
2012 ம் ஆண்டு பாலஸ்தினர்களை கடுமையாக நாய்கள் கடித்ததால், இனி நாய்களை கொண்டு மக்களை பிடிக்க மாட்டோம் என்றனர் இஸ்ரேல், ஆனால் அதன் பிறகும் உபயோகித்து வந்தது பாலஸ்தினர்களை பிடிக்க.
மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நன்றி:விகலத்தூர்
0 Comments