-முஹம்மத் பாஷிர்-
பொலன்னறுவையில் உடைக்கப்பட்டது பள்ளிவாயல் அல்ல என மேல் மாகாண சபை
உறுப்பினர் குறிப்பிட்டுள்ளதாக அவரின் அறிக்கைகளை ஊடகங்களில்
காணமுடிந்தது.
முன்னதாக எதிர்க்கட்சியில் இருந்த போது சிறிதையும் தூக்கிப் பிடித்த
முஜிபுர் ரஹ்மான் இன்று ஆளும் கட்சியானதும் தமது தரப்புக்கு வக்காளத்து
வாங்க ஆரம்பித்துள்ளார் என இந்த விடயத்தை மேற்கோள்காட்டி சகோதர ஊடாக
வியலாளர் துறையூர் மிஸ்பாஉல் ஹக் கருத்து பதிவிட்டுதுள்ளதை சரி என்றே நாம்
கருதேவேண்டியுள்ளது.
மஹிந்த ஆட்சியில் பள்ளிக்கு கல் எறிந்த சம்பவங்களுக்கு ஊடக மாநாடு நடத்திய இவர்கள் குறித்த கட்டிடத்தை அத்திவாரத்தை வேரோடு பலவந்தமாக புடுங்கியவர்களுக்கு எதிரா என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த ஊர்வாசிகள் தமக்கு பள்ளிவாயல் கட்டித்தருமாறு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்ததாக கட்டிடத்தை கட்டித்தர முன்வந்த நிறுவனம் உறுதிப்பட தெரிவித்தனர்.
சகோதரர் முஜிபுர் ரஹ்மான சொல்வதை போல இது பள்ளியே அல்ல என நாம்
வைத்துகொள்வோம் குறித்த அதே இடத்தில் முஸ்லிம்களுக்காக ஒரு கட்டிடத்தையாவது
கட்டிக்கொடுக்க அனுமதியை பெற்றுத்தர முஜிபுர் ரஹ்மானால் முடியுமா?
சமூகத்தின் மேல் அக்கறை இருந்தால் இதனை சவாலாக ஏற்று செய்து காட்டுங்கள் சகோதரர் முஜிபுர் ரஹ்மான அவர்களே…
0 Comments