Subscribe Us

'சுன்னத்' செய்வதால் பெரும் மத மாற்றம் நடக்கிறதாம்


'இஸ்லாமிய ஆண்கள் சுன்னத் (விருத்த சேதனம்) என்ற ஒன்றை தங்கள் பிறப்புறுப்பில் செய்து கொள்வதால் அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுகின்றனர். இதனால் கவரப்பட்ட பல இந்து பெண்கள் முஸ்லிம்களை நாடுகின்றனர். மேலும் சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் பொன்ற பாலிவுட் நடிகர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பதால் தங்களின் கதாநாயகனாக இஸ்லாமியர்களையே பெரும்பாலான பெண்கள் தேர்வு செய்கின்றனர். குஜராத்திலும், உபியிலும் இது நிறைய முன்பு நடந்துள்ளது. இதனால்தான் இந்து பெண்களை முஸ்லிம் ஆண்களுக்கு 'ராக்கி' கட்டச் சொல்லி விழாவே நடத்தினோம். அதில் பல நூறு பெண்கள் முஸ்லிம் ஆண்களுக்கு ராக்கி கட்டி தங்கள் சகோதரர்களாக மாற்றிக் கொண்டார்கள்.' என்று பிஜேபி தலைவர் கிரிராஜ் கிஷோர் அவுட்லுக் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். 

பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லையா? இவர்கள் ஓட்டு அறுவடை செய்து ஆட்சியில் அமர தங்கள் குடும்ப பெண்களின் மானத்தையும் கேவலப்படுத்த தயங்காதவர்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. மதமாற்றத்துக்கு முக்கிய காரணமே இந்து மதத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைதான். சாதி வெறி தொடர்ந்து கடை பிடிக்கப்படுவதுதான். அதை சரி செய்து விட்டால் பாதிக்கு மேற்பட்ட மத மாற்றங்களை தடுத்து விடலாம். ஆனால் அதனை செய்ய இவர்கள் விரும்பவில்லை. 'தும்பை விட்டு வாலை பிடித்தல்' என்று சொல்வார்களே அந்த நிலைதான் நம்நாட்டு இந்துத்வாவாதிகளுக்கு.

'சுன்னத்' செய்து கொள்வதால் ஆரோக்கியமும் அதிக நேர உடலுறவிலும் ஈடுபட முடியும் என்றால் இந்துத்வாவாதிகளும் செய்து கொள்ள வேண்டியதுதானே. அனைத்து மருத்துவர்களும் இதனை அங்கீகரிக்கிறார்களே! முன்பு ஜெயலலிதா அவர்கள் 'தொட்டில் குழந்தை' திட்டம் அறிமுகப்படுத்திய போது ஆண் குழந்தைகளுக்கு இலவச 'சுன்னத்' அரசு செலவில் செய்தார்களே. அது போல் செய்து கொள்வதுதானே! இது போன்ற தேவையற்ற ஆராய்ச்சிகளை விட்டு விட்டு இந்தியாவை பொருளாதாரத்தில் வல்லரசாக மாற்ற இவர்கள் ஆய்வு செய்தால் புண்ணியமாக போகும். :-)

கருமம்டா சாமி.... எதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது :-)

தகவல் உதவி
அவுட் லுக் நாளிதழ்
08-09-2014

--------------------------------------------------------------

சுன்னத் (விருத்த சேதனம்) செய்து கொள்வது கணவன் மனைவி இருவருக்கும் எந்த அளவு உடல் நலத்துக்கு நல்லது என்பதை இனி இந்து தினசரியில் வந்த ஒரு செய்தியை பார்போம்.

கடந்த 2010- ல் இந்தியாவில் 5,56,400 பேர் புற்று நோய் ( கேன்ஸர் ) நோயால் இறந்துள்ளனர். இது இந்தியாவின் மொத்த இறப்பில் 8 % ஆகும் . புற்று நோயால் இறப்பவர்களில் 71 % பேர் 30 வயது முதல் 69 வயதைச் சேர்ந்தவர்கள். மார்ச் 28 -ல் " The Lancet " என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன . 2001 - 2003 வரை இந்தியாவில் புற்று நோயால் இறந்தவர்கள் 7,137. ஆனால் 2010- ல் 5,56,400 பேர் . புற்று நோயால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிவேகமாக அதிகரித்து வருகின்றது . ஆண்களில் அதிகமான பேர் (23 % பேர் ) , வாயில் ஏற்படும் புற்று நோயால் (oral cancer) இறக்கின்றனர். இது புகையிலை , பாக்கு , பீடி , சிகரெட் , போன்றவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்றது.


பெண்களில் அதிகமான பேர் (17 % பேர் ) "Cervical cancer" எனப்படும் கருப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கின்றனர். இப்படி அதிகமான பெண்களைப் பழிவாங்கும் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் முஸ்லிம் பெண்களிடம் மிக மிக குறைவாகக் காணப்படுகின்றது . 75 % முஸ்லிம்கள் வாழும் ஜம்மு காஷ்மீரிலும் , 40 % முஸ்லிம்கள் வாழும் அஸ்ஸாமிலும் நடத்தப்பட்ட ஆய்வில் முஸ்லிம் பெண்களுக்கு கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் மிக மிகக் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இறப்பவர்களின் சதவீதத்தில் கால்வாசி பங்கு கூட இல்லை. 


இதற்கு முக்கியக் காரணம் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் ஆண்கள் விருத்தசேதனம் ( circumcision ) செய்வதுதான். விருத்தசேதனம் செய்வதால் பாலின சேர்க்கையின் போது HPV என்னும் வைரஸ் பரவுதல் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படுகின்றது. மேலும் ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும் வாய்ப்புற்று நோயும் முஸ்லிம்களுக்கு குறைவாகவே ஏற்படுகின்றது.

நன்றி தி ஹிந்து
29-03-2012


Post a Comment

0 Comments