Subscribe Us

மறந்தாரா... மறுத்தாரா... மறுக்கப்பட்டாரா?

(ஜே.ஜி. ஸ்டீபன்) 

பார­தத்தின் பிர­த­மராம் நரேந்­தி­ர­மோ­டியின் விஜயம் தொடர்பில் இலங்­கையின் அனைத்து தமிழ் ஊட­கங்­களும் வரிந்து கட்­டிக்­கொண்டு முக்­கி­யத்­துவம் கொடு த்து முன்­னி­லைப்­ப­டுத்தி புகழ்ந்து பாரா ட்டி புள­காங்­கிதம் கொண்­டி­ருந்­தன.
ஆனாலும் சிங்­கள ஊட­கங்­களோ சிங்­கள சமூ­கத்­தையே மருவி நிற்­கின்ற ஆங்­கில ஊட­கங்­களோ மோடியின் வருகை தொடர்பில் பெரி­தாக அலட்­டிக்­கொண்­ட­தாக தெரி­ய­வில்லை.
சிங்­கள மற்றும் ஆங்­கில ஊட­கங்கள் எவ்­வாறு மோடியின் இலங்கை விஜ­யத்தை அலட்­டிக்­கொள்­ளாது புறக்­க­ணித்த போக்கில் செய­லாற்­றி­யி­ருந்­த­னவோ அதே போக்கில் பிர­தமர் மோடியின் செயற்­றிட்­டங்­களும் அமைந்து விட்­டன. இது மறுக்க முடி­யாது அத்­துடன் தாளாத செயற்­பா­டா­கவும் அமைந்து விட்­டது.
தொப்­புள்­கொடி உறவு என்று பேசப்­ப­டு­கி­றது. கட்­டு­ரை­க­ளிலும் கவி­தை­க­ளிலும் வழங்­கப்­ப­டு­கின்­றன. அதா­வது இந்­தி­யாவின் தொப்புள் கொடி உற­வு­க­ளான மலை­யக சமூகம் விளிக்­கப்­பட்டு வரு­கி­றது. இவ்­வாறு விளிக்­கப்­ப­டு­வதில் அர்த்தம் இல்­லா­ம­லு­மில்லை. தோட்டத் தொழி­லா­ளர்கள் எனும் கீழ் நிலை அந்­தஸ்­துக்குள் மட்­டுமே வரை­ய­றுத்து நோக்­கப்­ப­டு­கின்ற மலை­யக சமூகம் இந்­திய வம்­சா­வளி­யினர் என்று அழைக்­கப்­பட்டு வரு­வதன் அர்த்­த­மா­னது அந்த சமூகம் இந்­திய நாட்­டுக்கு சொந்­த­மா­ன­வர்கள் என்­ப­தையே கோடிட்டுத் தொட்டுக் காட்டி நிற்­கின்­றது.
இவ்­வாறு இந்­தி­யா­வுக்கு சொந்­த­மா­ன ­வர்கள் என்­ற­தொரு சமூ­கத்­தின்பால் சிந்­திக்கத் தவ­றி­யி­ருப்­பது சகித்­துக்­கொள்ள முடி­யாத பாத­க­மான செயல் என்றே கூறத் ­தோன்­று­கி­றது. இந்­தி­யாவின் நோக்கில் இலங்கைத் தமிழர் என்­ற­தொரு பார்­வை யே இருந்து வரு­கின்­றது. எனினும் இங்கு வடக்கு, கிழக்­குப்­பி­ரச்­சி­னை­களை மையப்­ப­டுத்­திய விவ­காரம் இன்று சர்­வ­தே­சத்தின் முன்­னி­லையில் கொண்டு சேர்க்­கப்­பட்­டுள்­ளதன் கார­ணத்தால் இல ங்கைத் தமிழர் என்­றதும் வடக்கு, கிழக் கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட நெருக்­கு­வா­ரங்­க­ளுக்கு உட்­பட்ட இடம்­பெ­யர்ந்த மக்­களை மட்­டுமே குறித்து நிற்­கின்­றது.
எனினும் மலை­ய­கத்­திலும் தமிழ் மக்­கள்தான் வாழ்ந்து வரு­கின்­றனர் என்ற விடயம் இங்கு பேசப்­ப­டு­வ­தா­கவோ அல்­லது அலட்­டிக்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவோ இல்லை. வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சினை வேறு மலை­ய­கத்­தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் வேறு இந்த இரு பகு­தி­யி­ன­ரதும் பிரச்­சி­னைகள் தேவைப்­பா­டு கள் அபி­லா­ஷைகள் எதிர்­பார்ப்­புக்கள் உள்­ளிட்­ட­வற்றை ஒன்­று­ப­டுத்தி பேசு­வது ஏற்­கத்­தகாத, முடி­யாத விட­ய­மாகும்.
இருந்த போதிலும் தமிழ் மக்கள் எனும் பதத்­தோடு இணைத்து அணுகும் போது இவ்­விரு சாராரும் கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்­டி­யவர்­க­ளே­யன்றி ஒரு பகு­தி­யினரை ஏற்று மறு பகு­தி­யி­னரை புறக்­க­ணித்து செயற்­ப­டு­வது நேர்­மைத்­தன்மை வாய்ந்­த­தாக அமை­யாது.
வடக்கு, கிழக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­ப ட்ட அப்­பாவித் தமிழ் மக்­களின் அவ­சர அவ­சிய தேவைப்­பா­டு­களை கண்­ட­ றிந்து அவற்­றுக்குத் தீர்­வி­னைக்­காண்­பதை முதற்­ப­டி­யாக செயற்­ப­டுத்துவதை விடுத்து பசி த்­தி­ருப்­ப­வனைக் கொண்டு பொதி சுமக்க வைத்த கதை­யாக இன்று அந்த மக்­களின் நிலைமை மாறி­யி­ருக்­கின்­றது.
வடக்கு, கிழக்கில் தமிழ் அர­சி­யல்­வா­தி கள் அர­சியல் செய்­வ­தற்கு அந்த மக்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது போன்று மலை­யக த்­த­லை­மைகள் தமது அர­சி­யலை செய்­வ­தற்கு தோட்டத் தொழி­லா­ளர்­களை பயன்­ப­டுத்தி வரு­கின்­றன. இதனை இன்னும் ஆழ­மாக சொல்ல வேண்­டிய தேவை இங்­கில்லை.
இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தி ற்கு முன்­ப­தாக இங்கு வாழ் தமிழ் மக்­க­ளி­டத்­திலும் தமிழ் அர­சியல் வாதி­க­ளி­டத்­திலும் எதிர்­பார்ப்­புக்கள் நூறு மடங்­காக அதி­க­ரித்­தி­ருந்­தன. எனினும் மலை­ய­கமே முகம் மலர்ந்து பூரித்து மோடியின் வர­வு க்காய் காத்­தி­ருந்­ததை எப்­ப­டித்தான் வர்­ணித்துக் கூறு­வது என்­பது புரி­ய­வில்லை.
இலங்கை மண்ணில் காலடி வைத்த மோடி வடக்கு, தெற்கு என்று பறந்தார். ஆனாலும் இயற்­கையின் எழி­லோடு கலந்து கம்­பீ­ரமாய் காட்­சி­ய­ளிக்கும் மலை­ய­கத்­துக்கு சென்று திரும்­பு­வ­தற்கோ அல்­லது அத்­தனை எழி­லுக்கு மத்­தி­யிலும் நெற்றி வியர்வை சிந்தி உழைத்துக் கொண்­டி­ருக்கும் உண்­மை­யான தொழி­லாளர் வர்க்கம் என அழைக்­கப்­ப­டு­கின்ற ஒரு சமூ­கத்தை நேரில் பார்ப்­ப­தற்கோ ஒரு மணி நேரத்தை ஒதுக்­கித்­தர முடி­யா­த­வ­ராக மோடி ஆகி விட்டார்.
மோடியின் இலங்கை விஜ­யத்தின் போது அவர் மலை­ய­கத்தை மறந்­தரா? மலை­ய­கத்தை மறுத்­தாரா? அல்­லது மலை­யகம் அவ­ருக்கு மறுக்­கப்­பட்­டதா? என்­ற­தான கேள்­வி­களும் எழாமல் இல் லை.
கிராமம் ஒன்றே இல்லாது போன மீரியபெத்தைக்கும், இந்திய உதவியோடு நிர்மாணிக்கப்பட்டு வரும் கிளங்கன் வைத்தியசாலைக்கும், மாத்தளைக்கும் மோடி விஜயம் மேற்கொள்வார் என்றிருந்த வேளையில், இறுதியில் வெறுமையானது. மலையக சமூகத்தை பரிதாபத்துக்குள் ஆழ் த்திவிட்டுள்ளது.
அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா மற்றும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கே சவா­லாக விளங்கும் ஆசி­யாவின் ஒரே­யொரு நாடா ன இந்­தி­யாவின் பிர­தமர் என்ற அரச தலைவர் அண்டை நாட்­டுக்கு உத்­தி­ யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொள்­வா­ரே­யானால் அது வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்­க­தான ஒரு பகு­தி­யாகும். அப்­ப­டி­யொரு விஜ­யத்தை மேற்­கொண்ட மோடியின் வரு­கைக்கு முன்­ப­தா­கவே முன்­னோடி செயற்­பா­டுகள் அரங்­கேற்­றப்­பட்டு நிகழ்ச்சி நிரல்கள் தயா­ரிக்­கப்­பட்டு விடு­கின்­றன.
அந்த வகை­யில்தான் மோடியின் இல ங்கை விஜ­யத்­துக்கு முன்­ப­தாக அந்­நாட் டின் வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்­கைக்கு வருகை தந்­த­து டன் மோடியின் வரு­கைக்­கான ஏற்­பா­டு­க­ளையும் ஒழுங்­கு­ப­டுத்­தல்­க­ளையும் மேற் ­கொண்­டி­ருந்தார்.
இலங்கை வந்த மோடி தனது நாட்­டு டன் தொடர்பும் உறவும் கொண்­டுள்ள ஒரு சமூ­கத்தை பார்க்­காது புறக்­க­ணித்து சென்­றுள்ளார் என்றால் அது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத விட­ய­மாகும். புதிய அர­சாங்­கத்தின் மீதான இந்­தி­யாவின் நல்­லெண்­ணத்தை விரி­வு­ப­டுத்தி கொள்­வ­தற்கும் அதே­நேரம் இந்­தி­யாவின் மேலா­திக்­கத்தை இலங்­கையில் நிலை­நி­றுத்திக் கொள்­வ­தற்­கு­மான ஒரு விஜ­ய­மாக இவ்­வி­ஜயம் அமைந்­தி­ருக்­கின்­றது. இதில் பொதிந்­துள்ள உள்­நோக்­கங்கள் குறித்து நாம் இந்த கட்­டு­ரை­யுடன் அலட்­டிக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இருக்­காது.
இருந்த போதிலும் நல்­ல­தொரு சந்­தர்ப் பம் இங்கு கைந­ழுவி போயுள்­ள­மைக்கு அர­சி­யல்­வா­தி­க­ளையும் நொந்து கொள்ள வேண்­டி­யுள்­ளது.அர­சாங்­கத்தின் நோக்­க­மா­னது வடக்­கையும் தெற்­கையும் இணைத்­தி­ருப்­ப­தா­க வும் தமிழ் மக்­க­ளு­ட­னான உறவு பேணப்­பட்டு வரு­வ­தா­கவும் வெளி­யு­ல­குக்கு காட்­டிக்­கொள்ள வேண்டும் என்ற தேவை­யுடன் செயற்­பட்டு சாதித்­துக் ­கொண்­டது.
அர­சாங்­கத்தின் இத்­த­கைய போக்­குடன் முரண்டு பிடித்த வடக்கு அர­சியல் காய்­ந­கர்த்­த­லா­னது தமது சமூ­கத்தின் நிலை­மை­களை எடுத்­து­ரைப்­ப­தற்கும் அர­சியல் ரீதி­யி­லான அபி­லா­ஷை­களை எவ்­வாறு அடைந்து கொள்­வது என்­பது தொடர்­பி லும் மிகத்­தெ­ளி­வா­கவும் அதே­நேரம் மிக இல­கு­வா­கவும் அணுகி சாதித்து கொண்­டுள்­ளதை இங்கு கூறி­யாக வேண்டும்.
மோடி மலை­ய­கத்தை புறக்­க­ணித்­தாரா? மறந்­தாரா ?அல்­லது மறுக்­கப்­பட்­டரா? என்­றெல்லாம் எழு­கின்ற கேள்­வி­க­ளுக்கு நாம் விடை தேட முனை­வோ­மானால் அனைத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் எமது தலை­மைகள் மீதே சுமத்த வேண்­டி­யுள்­ளது.
முக்­கி­யத்­துவம் மிக்க அரச தலை­வ ரின் விஜ­யத்தின் போது மலை­ய­கத்தின் மீதான இந்­தி­யாவின் வகி­பாகம் தொட ர்பில் எடுத்­து­ரைப்­ப­தற்கும் அத­னூ­டாக அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொள்­வ­தற்கும் தவ­றி­யுள்­ளதை இங்கு சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.
பிரித்­தா­னி­யாவின் இள­வ­ரசர் சாள்ஸ் இலங்கை வந்­தி­ருந்த போது மலை­ய­க த்­துக்கு அழைத்து செல்­லப்­பட்ட அவ­ரு க்கு மலை­யக மக்­களின் உண்­மை­யான வாழ்க்கை நிலை மறைக்­கப்­பட்­டது. விய ர்த்­துக்­கொட்டும் வெயி­லிலும் உடல் முழு­வதும் ஊறி நனையும் மழை­யிலும் மலை­ய­கத்தின் பெண் தொழி­லா­ளிகள் பட்­டுப்­பு­டவை உடுத்தி நகை நட்­டுக்­களை மாட்­டிக்­கொண்டு தான் தொழில்­செய்­கின்­றனர் என்­ற­தொரு மாயத்­தோற்­றத்தை படம்­பி­டித்­துக்­காட்­டி­யி­ருந்­தனர்.
அப்­ப­டி­யா­கிலும் அவர் மலை­யக மக்­களை சந்­தித்­தாரே என்­ற­தொரு நிம்­ம­தியை அடைந்­தாலும் இந்­திய பிர­தமர் மோடி­யிடம் மலை­ய­கமே மறைக்­கப்­பட்டு விட்­டது என்­ப­துதான் கொடூ­ர­மான வேத­னை­யா­க­வுள்­ளது.
இதுதான் அவ்­வாறு ஆகி­விட்­டது என்­றாலும் மலை­ய­கத்­த­லை­மைகள் மோடி­யு டன் ஏற்­ப­டுத்­திக்­கொண்ட சந்­திப்­பை­யேனும் அர்த்­தப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்க வேண்டும். எல்­லாமே பழைய குரு­டியின் கதை­யாகி போயுள்­ளதை காண முடி­கின் ­றது.மலை­யகம் தொடர்­பிலும் மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் மூன்­றா­வது தரப்­பிடம் எடுத்­துக்­கூறும் விட­யத்­தி­லா­வது மலை­யகத் தலைமை தமது விதண்­டா­வாதக் கொள்­கை­களை சற்று புறத்தே வைத்து விட்டு செயற்­ப­டு­வ­தற்கு தவறி விடு­கின்­றன.
சமூ­கப்­பி­ரச்­சினை எனும் போது முஸ்­லி ம்கள் அணி திரண்டு ஒரு­ம­னதாய் குரல் கொடுத்து வெற்றி காண்­ப­வர்­களாய் திக ழ்ந்து வரு­கின்­றனர். அப்­ப­டி­யானால் சமூ கம் என்ற ரீதியில் ஏன் சில விட­யங்­களில் மலை­யக தலை­மை­களால் சில விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொள்ள முடி­யா­தி­ருக்­கின்­றது என்­பது புரி­யா­துள்­ளது.
மோடியின் வரு­கைக்கு முன்­ப­தாக இல ங்கை வந்த சுஷ்மா சுவ­ராஜை மலை­யக தலை­மைகள் முறை­யாக அணு­கி­யி­ருந் தால் மோடியின் விஜயம் மலை­ய­கத்­து க்கு எந்­த­ளவு முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்­பதை எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தால் நிச்­ச­யமாய் அது பரி­சீ­லிக்­கப்­பட்­டி­ருக்­குமே தவிர பாது­காப்பு பிரச்­சினை என்று சாக்­கு ப்­போக்கு கூறி மலை­யக மக்­களை சந்­திப்­ப­தற்­கான காரியம் தடைப்­பட்­டி­ருக்க வாய்ப்­பி­ருந்­தி­ருக்­காது.
மேலும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ர­ஸா­னது அமைச்சுப் பத­வி­களை வகித்த காலத்தில் ஏனைய மலை­யக கட் ­சி­களை பொருட்­டா­கவே கொண்­டது கிடை­யாது. முக்­கிய தலை­வர்­களை சந்­திக்கும் விட­யத்­திலும் சரி மலை­யக மக்­களின் விவ­காரம் தொடர்­பான விட­யங்­க­ளிலும் சரி அது தனித்தே முடி­வெ­டுத்து செயற்­பட்டு வந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
இதே­போன்­ற­தொரு நிலைமை இன் றும் காணப்­பட்டு வரு­கின்­றது. மோடி யை சந்­தித்த முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­யத்தில் அமைச்­சுப்­பொ­றுப்­புக்­களில் உள்­ள­வர்­களே பங்­கேற்­றி­ருந்­தனர். இதில் ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் இணைந்­தி­ருந்தார்.
மலை­யகத் தலை­மைகள் எல்­லோ­ருமே மலை­யக மக்கள் குறித்தே பேசப்­போ­கின்­றனர். அவர்­க­ளது பிரச்­சி­னைகள், அர­சியல் ரீதி­யி­லான தாக்­கங்கள்,இழப்­புக்கள் தேவைகள், குறை நிறைகள் குறித்தே பேசு­வது வழக்­க­மாகும். இவ்­வாறு தமது சமூகம் தொடர்பில் பிறி­தொரு நாட்­டு த்­த­லை­வ­ருடன் பேசு­வ­தற்கு முற்­ப­டு­கையில் ஏன் மலை­யக பிரதிநிதிகள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டக்­கூ­டாது என்­பது கேள்­வி­யாக உள்­ளது.
அர­சாங்­கத்­தோடு இல்­லாத இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தனி­யா­கவும் அர­சாங்­கத்­தோடு இருக்­கின்ற அமைச்­சர்கள் அடங்­கிய தலை­வர்கள் தனி­யா­கவும் மோடியை சந்­தித்­தது அவ­ரி­டத்தில் எத்­த­கைய எண்­ணங்­களைத் தோற்­று­வித்­தன என்­பது தெரி­யாது.
மலை­யக மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முக்­கிய தலை­மைகள் இவ்­வாறு பிரிந்து நின்று தனித்­த­னியே ஒரே சமூ­கத்தின் பணி செய்த அதே­ச­மயம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஆர். யோக­ராஜன் மற்றும் பி. இரா­ஜ­துரை ஆகி­யோரை இணைந்­துக்­கொள்­ளா­தது ஒரு பெருங்­கு­றை­பா­டாகும்.
இன்­றைய சூழ்­நி­லையில் மலை­ய­கத்தை பொறுத்­த­வ­ரையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏழு பேர் உள்ள போது மோடி­யு­ட­னான சந்­திப்பின் போது இருவர் கழட்டி விடப்­பட்­ட­வர்­க­ளாகி விட்­டனர். பொது நோக்கு கொண்ட ஒரு வேலைத்­திட்­டத்தில் கட்சி ரீதி­யான கொள்­கைக்கு இட­ம­ளிப்­பதை விட சமூ­கத்தின் பாலான கொள்­கைக்கு முன்­னு­ரி­மை­ய­ளிப்­பதே சிறந்­தது.
மலை­யக தலை­வர்கள் அனை­வ­ருமே காலத்­துக்கு காலம் ஏதோ­வொரு விட­ய த்தை முன்­னி­லைப்­ப­டுத்தி அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்று அறை­கூவல் விடுக்­கின்­றனர். ஆனால் யார் யாரோடு ஒன்­றி­ணை­வது என்­ற­தொரு ஏற்­றத்­தாழ்­வு­ட­னான போட்டித் தன்­மை­ யொன்றும் அக­லாது நிலைத்து நிற்­கின்­றது.
அந்த வகையில் நோக்­கினால் மோடி­யு­ ட­னான சந்­திப்­பினை கூட அனைத்து மலை­யக கட்சி தலை­மை­களும் இணைந்து மேற்­கொண்­டி­ருந்தால் அது பல­மா­ன­தா­கவும் அதே­நேரம் வெற்­றி­யா­ன­தா­கவும் அமைந்­தி­ருக்கும். இருப்­பினும் இவ்­வி­ட­யத்தில் தவறு இழைக்­கப்­பட்­டாகி விட்­டது.

தமது அர­சியல் இருப்­புக்கள், போட்­டி கள், பொறா­மைகள், ஏற்­றத்­தாழ்­வுகள் அனைத்­தையும் ஒரு­மிக்­கதாய் பயன்­ப­டுத்தி அப்­பாவி மக்­களை சித­ற­டிப்­பதும் அவர்­களை சீர­ழிப்­பதும் ஏற்­கத்­த­காத காரி­ய­மாகும்.இன்று மலை­ய­கத்தில் அர­சியல் போட்டி பொறா­மைகள் தலை­வி­ரித்­தா­டு­கின்­றன. அடுத்­த­வரை வீழ்த்தி அரி­யா­சனம் ஏறவேண்டும் என்ற நிலைப்­பாடு காலூன்­றி­யுள்­ளது. இதன் வெளிப்­ப­டைத்­தன்­மையை இன்று மக்கள் அறிந்து புரிந்து வரு­கின்­றனர். தோட்ட தொழி­லா­ளர்கள் இன்று மிகவும் ஆழ­மாக சிந்­திக்க தொடங்கி விட்­டனர். அதன் விளை­வு­க­ளேயே தேர்­தல்­களில் எடுத்­துக்­காட்டி வரு­கின்­றனர்.
அந்த வகையில் அடுத்து வரும் தேர்தல்களின் போது இனிவரும் அனைத்து செயற்பாடுகளிலும் தோட் டத் தொழிலாளர்கள் சிந்தித்தே செயற் படுவார்கள் என்பதை எவரும் மறந்து செயற்படக்கூடாது.
மலையக சமூகத்தின் பிரச்சினைகளை உண்மைத்தன்மையாக எடுத்துரைப்பதில் மலையக தலைமைகளிடத்தில் இராஜ தந்திர ரீதியிலான அணுகு முறை அவ சியமே தவிர அதனை விடுத்து பகட் டுக்காக செயற்படுவதோ தம்மால் மாத் திரமே அனைத்தும் முடியும் என்ற ரீதி யில் ஏகாதிபத்திய வாத முடிவுகளை மேற்கொள்வதோ சிறந்ததாகாது. அணுகு முறைக் கொள்கை எனும் போது தரப் புக்கள் ஓரணியாய் நிற்க வேண்டும். பிரிந்து நின்று தனித்து நின்று ஆற்றும் கருமம் எப்போதும் வெற்றியளிக்காது. ஒரு கை ஓசை என்பது நிஜத்தில் பூஜ்ஜியமே.
பிரதமர் மோடி இலங்கை வந்து மலை யக சமூகத்தைப்பற்றி சிந்தையில்லாது சென்று விட்டார் என்ற மனத் தாங்கல் ஒருபுறமிருக்க மலையக சமூகம் தொட ர்பிலான நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட வில்லை என்றும் தகவல்கள் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் மலையக சமூகத்தின் குறைகளை டில்லிக்கு வந்து கூறுமாறு கூறிச் சென்றிருப்பது வேதனை யிலும் வேதனையானது.
இந்நிலைமைகளுக்கு இலங்கை அரசா ங்கம், மலையக தலைமைகள் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் கண் டியியிலுள்ள இந்திய உதவித்தூதரகம் என அனைத்து தரப்பினருமே பொறுப்புக் கூற வேண்டும்.எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி பின்னர் ஏமாற்றுகின்ற நிலைமை இந்திய பிரதம ரின் இலங்கை விஜயத்தின் விடயத்திலும் மலையகத்துக்கு நேர்ந்திருக்கின்றது.

Post a Comment

0 Comments