உலக கோப்பை போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஐக்கிய அரபு
எமிரேட்சும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷெசாத் 93 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஹாரிஸ் சொகைல் 70 ரன்களும், மிஸ்பா 65 ரன்களும், மக்சூத் 45 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றிக்கு 340 ரன்கள் தேவை என்ற இலக்குடன் எமிரேட்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அலியும், பெரெங்கரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அடுத்து வந்த கிருஷ்ண சந்திரனும் டக் அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய குர்ரம் கான் அதிரடியை கையாள, மறுமுனையில் அன்வர் நிதானத்தை கடைபிடித்தார். இருவரும் இணைந்து 29வது ஓவர் வரை மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாத வண்ணம் ரன்களை சேர்த்தனர்.
இந்நிலையில் குர்ரம் கான் 30வது ஓவரில் 43 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய பாட்டீலும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். 33வது ஓவரில் அன்வர் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 36வது ஓவரில் பேட்டிங் பவர்பிளே எடுக்கப்பட்டது. அப்போது அடித்து ஆட முற்பட்ட அன்வர் அப்ரிடி பந்தில் 62 ரன்களுக்கு அவுட்டானார்.
அடுத்து வந்த முஸ்தபா வந்த வேகத்தில் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அம்ஜத் ஜாவேத் 46வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜாவேத், 50வது ஓவரின் 2வது பந்தில் 40 ரன்களுக்கும்(33 பந்துகள்) அவுட்டானார். 5வது பந்தில் 36 ரன்களுக்கு பாட்டீலும் அவுட்டானார்கள். இதனால் எமிரேட்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் அணி 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் அகமது ஷெசாத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷெசாத் 93 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஹாரிஸ் சொகைல் 70 ரன்களும், மிஸ்பா 65 ரன்களும், மக்சூத் 45 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றிக்கு 340 ரன்கள் தேவை என்ற இலக்குடன் எமிரேட்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அலியும், பெரெங்கரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அடுத்து வந்த கிருஷ்ண சந்திரனும் டக் அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய குர்ரம் கான் அதிரடியை கையாள, மறுமுனையில் அன்வர் நிதானத்தை கடைபிடித்தார். இருவரும் இணைந்து 29வது ஓவர் வரை மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாத வண்ணம் ரன்களை சேர்த்தனர்.
இந்நிலையில் குர்ரம் கான் 30வது ஓவரில் 43 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய பாட்டீலும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். 33வது ஓவரில் அன்வர் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 36வது ஓவரில் பேட்டிங் பவர்பிளே எடுக்கப்பட்டது. அப்போது அடித்து ஆட முற்பட்ட அன்வர் அப்ரிடி பந்தில் 62 ரன்களுக்கு அவுட்டானார்.
அடுத்து வந்த முஸ்தபா வந்த வேகத்தில் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அம்ஜத் ஜாவேத் 46வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜாவேத், 50வது ஓவரின் 2வது பந்தில் 40 ரன்களுக்கும்(33 பந்துகள்) அவுட்டானார். 5வது பந்தில் 36 ரன்களுக்கு பாட்டீலும் அவுட்டானார்கள். இதனால் எமிரேட்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் அணி 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் அகமது ஷெசாத் தேர்வு செய்யப்பட்டார்.
0 Comments