பாராளுமன்ற விவாதம் ஒன்றை ஆரம்பித்து
வைத்த முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி எனும் பெருமையைத் தனதாக்கிக்
கொண்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. இதற்கு முன்னிருந்த ஜனாதிபதிகள்
பெரும்பாலும் வாத விவாதங்களில் பங்கெடுப்பதைத் தவிர்த்து வந்திருப்பதோடு
ஒரு சில சந்தர்ப்பங்களில் தமது அமைச்சு சம்பந்தமான கேள்விகளுக்கு பதில்
மாத்திரமே வழங்கியதையே காணக்கூடியதாக இருந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்ரி
ஓளடத கட்டுப்பாட்டுக் கொள்கை சம்பந்தமான இரண்டாம் நாள் விவாதத்தினை
ஆரம்பித்து வைத்துள்ளதன் மூலமே நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி ஒருவர்
இவ்வாறு விவாதத்தினை ஆரம்பித்து வைத்த முதலாவது சந்தர்ப்பத்தினை
உருவாக்கியுள்ளார்.
புதிய அரசின் வேலைத்திட்டத்துக்கமைய
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீக்கப்படவிருப்பதால் இது வரலாற்றில்
ஒரு பதிவாகவே இருக்கும் என தகவல் மூலம் சுட்டிக்காட்டியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments