இம்மாதம் 13
ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அன்றைய
தினம் மாலை பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
மாலை 5 மணியளவில் இந்தியப் பிரதமரின் உரை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்திய
பிரதமரின் இலங்கை பாராளுமன்ற உரை மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்ததாக அமையும் என்றும், அது வரலாற்று ரீதியான நிகழ்வாகும்
என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 13 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இந்திய பிரதமரின் உரைக்காக பாராளுமன்றம் விசேடமாக கூடவுள்ளது.
இதற்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளினது அனைத்து
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதற்காக அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும்
13 ஆம் திகதி இலங்கை வரும் இந்திய பிரதமர் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி
ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.
வடக்குக்கு
விஜயம் செய்யும் இந்திய பிரதமர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.
விக்கினேஸ்வரனையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
1987 ஆம்
ஆண்டுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயம்
மேற்கொண்டு இலங்கை வரவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இதற்கு
முன்னர் 2008 ஆம் ஆண்டு முன்னாள் இநதிய பிரதமர் மன்மோகன் சிங்
இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தாலும்
அது அரச விஜயமாக அமையல்லை
0 Comments