Subscribe Us

header ads

இலங்கை வர­வுள்ள இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி பாராளுமன்றில் 13ஆம் திகதி விசேட உரை


இம்மாதம் 13 ஆம் திகதி இலங்கை வர­வுள்ள இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அன்­றைய தினம் மாலை பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை நிகழ்த்­த­வுள்ளார்.
மாலை 5 மணி­யளவில் இந்­தியப் பிர­த­மரின் உரை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

இந்திய பிர­த­மரின் இலங்கை பாரா­ளு­மன்ற உரை மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமையும் என்றும், அது வர­லாற்று ரீதி­யான நிகழ்­வாகும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் 13 ஆம் திகதி வௌ்ளிக்­கி­ழமை இந்­திய பிர­த­மரின் உரைக்­காக பாரா­ளு­மன்றம் விசே­ட­மாக கூட­வுள்­ளது. 

இதற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அர­சியல் கட்­சி­க­ளி­னது அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இதற்­காக அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் 13 ஆம் திகதி இலங்கை வரும் இந்­திய பிர­தமர் யாழ்ப்­பாணம் மற்றும் கண்டி ஆகிய பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்­ய­வுள்ளார். அத்­துடன் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்­த­வுள்ளார். 

வடக்­குக்கு விஜயம் செய்யும் இந்­திய பிர­தமர் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்வ­ரனையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.

1987 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் இந்­திய பிர­தமர் ஒருவர் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வர­வுள்­ளமை இதுவே முதல் தட­வை­யாகும். 

இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு முன்னாள் இந­திய பிர­தமர் மன்­மோகன் சிங் இலங்­கையில் நடை­பெற்ற சார்க் மாநாட்டில் கலந்­து­கொள்ள வந்­தி­ருந்­தாலும் அது அரச விஜ­ய­மாக அமையல்லை

Post a Comment

0 Comments