Subscribe Us

header ads

நாமலுக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக அறிக்கை ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் வேறொரு நாளை மாற்றி தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அழைப்பு விடுக்கப்பட்ட தினத்தில் நாமல் ராஜபக்சவிற்கு முக்கியமான வேறு வேலை இருப்பதாக கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணை மேற்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments