Subscribe Us

header ads

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டுபட்டால் நன்மை எங்களுக்கே: பிரதமர்


ஸ்ரீரீலங்கா சுதந்திர கட்சி இரண்டுபடுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு அனுகூலம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நுகேகொட கூட்டத்திற்கு  வருகை தந்தவர்கள் திருடர்களே என கூறியுள்ளார்.
நுகேகொட கூட்டத்திற்கு வந்தவர்கள் மகிந்தவின் திருடர்கள் சிலரே. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி துண்டு துண்டாக பிரிவது ஐக்கிய தேசிய கட்சிக்கு மிகவும் அனுகூலமான ஒரு விடயமாகும்.
நாங்கள் ஏனோதானோ என்று திருடர்களை பிடித்துக்கொள்ள மாட்டோம். வாய் மூலமே காலத்தை ஓட்டுபவர்களே அதிகம். நாங்கள் அவ்வாறான திருடர்களை நிச்சயமாக கைது செய்வோம்.
மகிந்த, வீரவன்சவின் மனைவியை பார்க்க சென்றிருந்த போது, தற்போதைய வேலைகளை பாருங்கள் இது ஒரு பழிவாங்கும் அரசாங்கம் என்று கூறியுள்ளார். தன்னால் எப்படி இவ்வாறான ஒரு விடயத்தை கூறமுடிந்ததென எனக்கு புரியவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments