Subscribe Us

இலங்கையில் போலியோ ஊசி மருந்தை, அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்


போலியோ நோயை தடுப்பதற்காக தற்போது குழந்தைகளுக்கு வாய் மூலம் வழங்கப்படும் மருந்துக்கு பதிலாக, ஊசி மருந்து ஒன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பொது சுகாதார விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் போலியோ தடுப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் ஊசி மருந்து மூலம் போலியோ தடுப்பை வழங்கும் முறைமை எதிர்வரும் மே மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Post a Comment

0 Comments