Subscribe Us

header ads

26 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னார் ரயில் சேவைகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் 14 ஆம் திகதி ஆரம்பம்!

(எஸ்.றொசே­ரியன் லெம்பேட்) 


இலங்கை வரும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி எதிர்­வரும் 14 ஆம் திகதி
மன்­னா­ருக்கு  செல்­ல­வுள்ள நிலையில் சுமார் 26 வரு­டங்­க­ளுக்கு பின்பு
மத­வாச்­சி­யி­லி­ருந்து தலை­மன்­னா­ருக்­கான ரயில் சேவையை ஆரம்­பித்து வைக்­க­வுள்ளார்.

1990 ஆம் ஆண்­டுக்குப்  பின்னார் நாட்டில் இடம் பெற்ற யுத்தம் கார­ண­மாக
தெற்­கி­லி­ருந்து ரயில் சேவைகள் இடை நிறுத்­தப்­பட்­டது. 

யுத்­தத்தின் கார­ண­மாக  ரயில் பாதைகள் பாதைகள், ரயில் நிலை­யங்­களும்
சேத­ம­டைந்­தி­ருந்­தன. இதன் கார­ண­மாக -சுமார் 26 வருட கால­மாக மத­வாச்­சியிலிருந்து மன்­னா­ருக்­கான ரயில் சேவைகள் தடைப்­பட்­டி­ருந்­தது. 

இந்த நிலையில் மத­வாச்­சியில் இருந்து மன்னார் திருக்­கே­தீஸ்­வரம் ரயில் நிலையம் வரை­யி­லான  பாதைகள் மற்றும் தரிப்­பி­டங்கள் அமைக்கும் பணிகள் முடி­வ­டைந்­துள்­ளன. 

திருக்­கே­தீஸ்­வரம் ரயில் நிலை­யத்திலிருந்து தலை­மன்னார் புகை­யி­ரத தரிப்­பிடம் வரை­யி­லான வேலைத்­திட்­டங்கள் தற்­போது முடி­வ­டையும் நிலையில் உள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.


Post a Comment

0 Comments