கற்பிட்டி, நுரைச்சோலையில் அமைந்துள்ள நிலக்கரி அனல் மின்
நிலையத்திற்கு லங்கா கோல்ட்ஸ் நிறுவனத்திலிருந்து கொள்வனவு செய்ததாகக்
கூறப்படும் நிலக்கரி கப்பல்கள் 2-ல் இருந்து 145 கோடி ரூபாய் மோசடி செய்த
குற்றச்சாட்டின் பேரில் கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் காஞ்சன ரத்வத்தை
உட்பட 4 அதிகாரிகளை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் விசேட விசாரனைப் பிரிவின்
பணிப்பாளர் மெவன் சில்வா தெரிவித்தார்.
2012/2013-ம் வருடங்களில்
மின் நிலையத்திற்காக கொண்டுவரப்பட்ட நிலக்கரி கப்பல்களை சீரற்ற காலநிலை
காரணமாக கரையொதுக்க முடியாது என்றும் வெடித்துச் சிதர அன்மித்துள்ளதாகவும்
கூறிய சந்தேகநபர்கள் இந்தியா நிறுவனமொன்றுக்கு நிலக்கரியை விற்பனை செய்து
416 மில்லியன் 119 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டுள்ளதாக முறைப்பாட்டில்
குறிப்பிடப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அமைச்சரவை அனுமதி
பெறப்படாமல் நடைபெற்ற இக்கொடுக்கல் வாங்கலுக்கு மின்சார சபையின் தலைவர்
அநுர விஜேபாலவின் அனுமதியும் கிடைத்திருக்கவில்லை என கூறப்படுகின்றது.
இக்கொடுக்கல் வாங்கலில் தொடர்புபட்ட லங்கா கோல்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர்
2014 டிசம்பர் மாதம் மாரடைப்பினால் மரணமடைந்தார். இக் கொடுக்கல் வாங்கல்
குறித்து சந்தேக நபர்களிடம் பொலிஸ் விசேட விசாரனைப் பிரிவின் விசாரனைகள்
நடைபெறுகின்றது. இன்று (2015.03.04)-ம் திகதி இவர்கள் நீதிமன்றத்தில்
ஆஜர்செய்யப்படுவார்கள்.
மூலம்: லங்காதீப
நன்றி:The Puttalam Times
0 Comments