Subscribe Us

header ads

வெளிநாட்டுச் சந்தைக்கு பறக்கும் இலங்கையின் முதலாவது ஆளில்லா விமானம் (படங்கள், வீடியோ)


இலங்கை, மொரடுவை பல்கலைக் கழகத்தினால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ‘சீ ஹோக்’ (CeyHawk) ஆளில்லா விமானம் வெளிநாட்டு சந்தையில் விற்பனைக்கான தயார் நிலையில் உள்ளதாக பல்கலைக் கழகத்தின் இலத்திரணியல் மின் தகவல்துறை பேராசியர் ரொஹான் முனசிங்க தெரிவித்தார். இவ் விமானம் வெளிநாட்டு சந்தையில் விற்பனைக்குரிய தரத்தில் இருப்பதை பரீட்சித்து உறுதிசெய்துள்ளதாக விமான நிருமாணக் குழுவின் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் பேராசிரியர் முனசிங்க கூறினார்.

இலங்கை வரலாற்றில் விமானமொன்று வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்படும் முதன் முயற்சி இதுவாகும்.

“சாதாரணமாக விமானத்தின் வடிவ அச்சு ஒன்றை தயாரிப்பதற்கு பல கோடி ரூபாய் செலவாகும். எனினும் புதிய நுட்பமொன்றைக் கையாண்டு வியக்கத்தக்க விதத்தில் மிகவும் குறைந்த செலவில் விமானத்தின் வடிவ அச்சு நிருமாணிக்கப்பட்டது” எனக் கூறிய பேராசிரியர், “பொதுவாக விமானங்களின் சிறகு நீள் சதுர வடிவமாகது. ‘சீ ஹோக்’ விமானத்தின் சிறகுகள் வட்ட வடிவமானது. இதனால் அதிக சுமையை சுமக்கும் வல்லமையைப் பெறுகின்றது” எனவும் குறிப்பிட்டார்.

வேவு பார்க்கும் ஒற்றர் வேலைக்காக இவ் விமானங்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.



மூலம்: ලංකාදීප லங்காதீப

நன்றி:The Puttalam Times

Post a Comment

0 Comments