உலகின் மிகவும் வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள மிஸவோ ஒகவா, தனது 117 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
ஜப்பானிய ஒஸ்கா பிராந்தியத்தில் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி பிறந்த அவர், 2013 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வயதான நபராக கின்னஸ் உலக சாதனை பதிவேட்டு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டார்.
தனது நீண்ட ஆயுளின் இரகசியம் குறித்து தான் இன்னும் அறியாதுள்ளதாக தெரிவிக்கும் அவர், 8 மணிநேர தூக்கம் 102 வயது வரை நிலத்தில் அமர்தல் என்பவற்றை பின்பற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
உணவு, உறக்கம், ஓய்வாக இருத்தல் என்பன நீண்ட ஆயுளுக்கு உறுதுணையாக அமையும் என நம்புவதாக அவர் தெரிவித்திருந்தார். அவர் வினாகிரி, மீன், சோறு என்பவற்றை உள்ளடக்கிய சுஷி உணவை விரும்பி உண்டு வருகிறார். 1919 ஆம் ஆண்டு திருமணம் செய்த அவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்மார் உட்பட 3 பிள்ளைகள் உள்ளனர். அந்த 3 பிள்ளைகளும் தற்போது உயிருடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரது மகள்மாரின் வயது முறையே 94 வயது மற்றும் 92 வயதாகும். ஒகவாவின் கணவர் 1931 ஆம் ஆண்டு மரணமானார்.




0 Comments