ஜப்பானானது புதிய உளவு விண்கலமொன்றை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
அயல் நாடான வடகொரியா 1998 ஆம் ஆண்டு ஜப்பானிய பிரதான நிலப்பகுதிக்கு மேலாக பசுபிக் சமுத்திரத்தில் மத்திய தர ஏவுகணையை ஏவிப் பரிசோதித்ததையடுத்து ஜப்பான் 2000களின் ஆரம்பத்தில் உளவு செய்மதிகளை செயற்படுத்த ஆரம்பித்தது.
இந்நிலையில் ஜப்பானின் ஜக்ஸா விண்வெளி முகவர் நிலையமும் மிட்ஸுபிஷி நிறுவனமும் தனெக்கஷிமா விண்வெளி ஏவுதளத்திலிருந்து மேற்படி புதிய உளவு விண்கலத்தை ஏவியுள்ளது.


0 Comments