நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 59 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட அத்திடிய பொதுச் சந்தை இன்று அமைச்சகளான ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரினால் திறந்துவைக்கப்பட்டது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாராந்த சந்தையொன்று இல்லாமையால் பிரதான பாதையோரத்தில் அகங்காடி வியாபாரிகள் வியாபாரம் நடத்திவந்தமையால் பொதுமக்களும் போக்குவரத்து பயணிகளும் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கினர்.
இந்நிலையில் தெஹிவளை கல்கிசை மேயரின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் நகர அபிவிருத்தி செயலாளராக கடமையாற்றிய கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிகுடியிருந்தவர்களை வெளியேற்றி இவ் வாராந்த சந்தையை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
– அஸ்ரப் ஏ சமத் –





0 Comments