Subscribe Us

header ads

"நான் உன்னை பார்க்க வீட்­டுக்கு வரு­கின்றேன்.” FACEBOOKகால் சீரழிக்கப்பட்ட சிட்டு ( இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவம்.)


பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த  நண்­பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உற­வுகள் என  அனை­வ­ரையும் இன்று ஒரு வலை­ய­மைப்­புக்குள் இணைத்து அன்­றாடம் கருத்து  பரி­மாற்­றங்கள், அரட்­டைகள், பசு­மை­யான நினை­வு­களின் மீட்­டல்கள் என  அனைத்­க்கும் பேஸ்புக் அரிய சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்திக்  கொடுத்­தி­ருக்­கின்­றது என்றால் அது மிகை­யா­காது.  

ஆனால் இவை­யெல்லாம் ஒரு  பக்­க­மி­ருக்க சில கய­வர்­களின் போலி பேஸ்புக் கணக்­கினால் ஏற்­படும்  குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­ கொண்டே செல்­கின்­றன. அதுவும் பெண்­களை இலக்­காக கொண்டு போலி பேஸ்புக் கணக்­கு­களின் மூலம் பாலியல் தொந்­த­ர­வுகள், பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் என்­பன அதி­க­ரித்து வரு­கின்­றமை பேஸ்புக் என்­றாலே ஆபத்­தா­னது என்ற சிவப்பு நிற சமிக்­ஞை­யையே வெளிப்­ப­டுத்தி  நிற்­கின்­றது

அந்த வகையில் இவ்­வாரம் குற்றம்  பகு­தியில் இடம்­பெ­று­வது காலத்தின் தேவைக்­கேற்ப தன்­னு­டைய ஆடை­க­ளிலும்  புதிய நவ­நா­க­ரிக பரி­மா­ணங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்று நினைத்த  இளம் பெண் பிரி­யங்­கா­வுக்கு (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) போலி பேஸ்புக் கணக்­கினால் ஏற்­பட்ட பெரும் ஆபத்து தொடர்­பான கதை­யாகும். பிரி­யங்கா பெய­ருக்கு ஏற்றாற் போல் வசீ­க­ர­மா­னவள். குடும்­பத்தில் இளை­ய­வ­ளான இவளின் தாயும், தந்­தையும் அரச ஊழி­யர்கள் என்­பதால் காலையில் தொழி­லுக்­காக வெளியில் சென்றால் இரவு  நேரத்தில் தான் வீட்­டுக்கு வரு­வார்கள். பிரி­யங்­கா­வுக்­கென்று இருந்தஒரே சகோ­த­ரியும் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் முகா­மைத்­துவ  பட்­டப்­ப­டிப்­பினை தொடர்­வதால் பிரி­யங்கா தன்­னு­டைய கண் தெரி­யாத  பாட்­டி­யு­ட­னேயே பெரும்­பா­லான பொழுதை கழித்தாள்எனவே, 

கல்வி பொது­த்த­ரா­தர சாதா­ரணத்  தர பரீட்­சையை எழுதி விட்டு உயர்­த­ரத்தை தொடரும் எதிர்­பார்ப்­புடன்  காத்­தி­ருந்த பிரி­யங்கா இந்த இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் தையல் கலை டிப்­ளோமா சான்­றி­தழைப் பெறு­வ­தற்­காக கிழ­மையில் இரண்டு நாட்கள் தையல்  வகுப்­பு­க­ளுக்கு சென்று வந்தாள். இயல்­பா­கவே கைப்­பணிப் பொருட்கள்  மற்றும் தையல் போன்­ற­வற்றில் ஆர்­வமும், திற­மையும் கொண்­டி­ருந்த  பிரி­யங்­கா­வுக்கு இது மேலும் அவ­ளு­டைய திற­மையை வளர்த்துக் கொள்­வ­தற்­கான சரி­யான சந்­தர்ப்­ப­மா­க­வி­ருந்­தது. எனவே, தையல்  வகுப்­பு­க­ளுக்கு சென்று பயிற்சி பெற்­றதை தொடர்ந்து தனக்கு தேவை­யான  ஆடை­களை புதிய நவ­நா­க­ரிக வடி­வங்­க­ளுடன் அவளே தைத்து தன்  தோழி­க­ளி­டமும் அவற்றை காட்டப் பெரு­மைப்­பட்டாள்.தோழி­க­ளுக்கும் அவள் தைத்த ஆடை­களில் காணப்­பட்ட நேர்த்­தியும், புதிய வடி­வங்­களும் மிகவும்  பிடித்­தி­ருந்­தது. எனவே பிரி­யங்­காவின் உற்ற தோழி­யான நர்­மதா ஒரு புதிய  ஆடை­யொன்­றினை பிரி­யங்­கா­விடம் கொடுத்து தைப்­ப­தற்­காக பிரி­யங்­காவின்  வீட்­டுக்கு வரு­கின்றாள். வந்­தவள் ஒரு ஆலோ­ச­னை­யொன்­றி­னையும் முன்  வைக்­கின்றாள். "நான் இணை­யத்தில் பார்த்தேன். நாளுக்கு நாள் புதிய  வடி­வ­மைப்­பு­க­ளு­ட­னான ஆடை­களை பதி­வி­றக்கம் செய்­கின்­றார்கள். நீயும் அவற்றை பார்த்தால் உனக்கு இன்னும் புதிய முறையில் தைக்க உத­வி­யா­க­வி­ருக்கும். எனவே முயற்சி செய்து  பாரு”. என்று ஆலோ­சனை வழங்­கினாள். 

அவளின் ஆலோ­சனையின் படி அன்று முதல் செயற்­பட ஆரம்­பித்த பிரி­யங்கா இணை­யத்தில் புதிய மொடலிங் பெண்­களின் ஆடைவடி­வ­மைப்­பு­களை பார்க்கத் தொடங்­கினாள். அது மட்­டு­மின்றி, கையோடு  பேஸ்புக் கணக்கு ஒன்­றி­னையும் ஆரம்­பித்தாள். அதில் தனக்கு தெரிந்த  நண்­பர்­களை இணைத்­துக்­கொண்­டவள், ஒரு நாள் கீர்த்­தனா என்ற ஆடை தையல் கலை  நிபுணர் ஒரு­வரின் பேஸ்பு  கணக்­கினை பார்­வை­யி­டு­கின்றாள்.கீர்த்­தனா மிக அழ­கா­னவள். 

மட்­டு­மின்றி அவ­ளது பேஸ்புக் கணக்கில் மிக அழ­கிய ஆடை  வடி­வ­மைப்­பு­க­ளையும் அவளால் காணக் கூடி­ய­தா­க­வி­ருந்­தது. எனவே,  அவ­ளோடு பேஸ்புக் ஊடாக நட்­பினைப் பேணினால் தனக்கு  பிர­யோ­ச­ன­மா­க­வி­ருக்கும் என்­றெண்ணி அவ­ளுக்கு ப்ரெண்ட் றிக்குவெஸ்ற்   நட்­புக்­கான அழைப்­பு­யொன்­றினை விடு­கின்றாள். அதன் பின் இரு நாட்கள்  கீர்த்­தனா தனது நட்­பினை தொடர்­வ­தற்­கான அங்­கீ­கா­ரத்தை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்­ப்புடன் காத்­தி­ருந்­த­வ­ளுக்கு இரு நாட்கள் கழித்தே  அங்­கீ­காரம் கிடைத்­தது. கீர்த்­தனா அவளின் நட்பிற்கு அங்கீகாரம்  வழங்கியிருந்தால்  request னை accept பண்­ணி­யி­ருந்தாள். ) 

அதன்பின் முதன் முதலில் பிரி­யங்­காவின் ஹாய் என்ற வார்த்­தையின் ஊடாக தொடங்­கிய இரு­வரின் நட்பும்  மிக நீண்ட வார்த்­தை­களின் ஊடாக வளர்ந்­தது.அது­மட்­டு­மின்றி, இரு­வரும் தாங்கள்  புதிதாய் தைக்கும் ஆடை­க­ளையும் புகைப்­ப­டங்­க­ளாக எடுத்து பேஸ்­புக்கின்  ஊடாக பகிர்ந்து மகிழ்ந்­தார்கள். சில நாட்­களின் பின் தன்னை பற்­றிய  அனைத்து விட­யங்­க­ளையும் கீர்த்­த­னா­வுடன் பகிர்ந்து கொண்­டது  மட்­டு­மின்றி, பிரி­யங்கா தனது புகைப்­ப­டங்கள் சில­வற்­றையும்  கீர்த்­த­னா­வுக்கு அனுப்­பினாள். அவற்றை பார்த்த கீர்த்­தனா  பிரி­யங்­கா­விடம் "நீ பார்க்க மிக அழ­காக இருக்­கிறாய்” என்று கூறினாள்.  இவற்­றை­யெல்லாம் கேட்ட பிரி­யங்­கா­வுக்கு மன­துக்குள் அவளை அறி­யா­மலே  ஒரு பூரிப்பு.... கீர்த்­த­னாவின் தீவிர ரசி­கை­யானாள் பிரி­யங்கா. 

எனவே  இவற்­றை­யெல்லாம் தனக்கு சாத­க­மாக்­கிக்­கொண்ட கீர்த்­தனா,  பிரி­யங்­காவின் தாய், தந்தை, சகோ­தரி வீட்டில் இல்­லாத நேரத்­தினை சரி­யாக  அறிந்து கொண்டு பிரி­யங்­கா­விடம் "நான் உன்னை பார்க்க வீட்­டுக்கு வரு­கின்றேன்.” என்று உறு­தி­ய­ளிக்­கிறாள். பிரி­யங்­கா­வுக்கோ கொள்ளை  இன்பம். சந்­தோ­ஷத்தில் தலை கால் தெரி­யாமல் துள்ளிக் குதித்தாள்.பேஸ்­புக்கில் அறி­மு­க­மான ஒரு தோழி,  பிர­பல தையல் கலை நிபுணர் என்னை பார்க்க வரு­கின்­றாளா?" என்று பெரு­மிதம்  கொண்டாள். அந்த நாளுக்­காக வழி மேல் விழி வைத்துக் காத்­தி­ருந்தாள்.அன்று அந்த நாளும் வந்­தது. பிரி­யங்கா  முன்­கூட்­டியே கீர்த்­த­னாவை வர­வேற்­ப­தற்­காக கேக், மற்றும் இனிப்பு  பண்­டங்கள் சில­வற்­றையும் தயா­ரித்­தி­ருந்தாள். அப்­போது வீட்டின்  அழைப்பு மணி அல­று­கின்­றது. பிரி­யங்கா தனது வீட்டின் கதவை ஓடிச் சென்று  திறக்­கின்றாள். ஆனால் அன்று தனது வீட்டின் வாசலில் நின்­றது கீர்த்­தனா  அல்ல.. மாறாக வேறு ஒரு ஆணே. உடனே பிரி­யங்கா "நீ யார்” என்று  வின­வு­கின்றாள்..பதி­லுக்கு அவன் "நீ புகைப்­ப­டத்தில்  இருப்­பதை விட மிக நேரில் மிக அழ­காக இருக்­கின்றாய். 

நான் தான் உன்­னோடு  பேஸ்­புக்கில் உரை­யா­டிய கீர்த்­தனா. எனினும் நான் கீர்த்­தனா இல்லை நான்  மைக்கல்” என்று கூறினான். பிரி­யங்­காவின் உடல் மெய் சிலிர்த்­தது.  பயத்தில் நா வார்த்­தை­களை முடக்­கி­யது. அவனை தன் கைகளால் தள்ளி விட்டு  வேக­மாக வாசல் கதவை அடைத்து விட்டு அறைக்குள் ஓடினாள். எனினும் மைக்கல்  விடு­வதாய் இல்லை தொடர்ந்து கதவை தட்­டி­ய­வாறே வாசலில் காத்­தி­ருந்தான்.உண்­மையில் மைக்கல் என்ற பெயரைக் கொண்ட  அவன் தனது பெயரை கீர்த்­தனா என்ற பெண்ணின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கின்  மூலம் பிரி­யங்­கா­விடம் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­துடன் அவளை தனது  ஆசை­க­ளுக்கு சூழ்ச்­சி­யான முறையில் பயன்­ப­டுத்தும் எண்­ணத்­தி­லேயே  ஆகும். 

எனினும் அன்று மைக்­கலின் எண்ணம் ஈடே­ற­வில்லை. பிரி­யங்கா   மைக்­கலின் தொடர் தொந்­த­ர­வு­க­ளுக்கு பயந்து பக்­கத்து வீட்­டி­லி­ருந்த  ஒரு­வரை உத­விக்கு அழைக்­கின்றாள். எனவே நிலைமை மோச­மாகி விடும் என்­பதை  உணர்ந்­தவன் வேறு ஒரு வழியில் பிரி­யங்­காவை மடக்­கலாம் என்ற முடிவில் அவ்­வி­டத்தை விட்டு மெது­வாகச் சென்று விட்டான்.&nbspஎனினும் அன்று அமை­தி­யாக சென்­றவன் அதன் பின் மிகவும் கீழ்த்­த­ர­மான செயல்­களில் ஈடு­படத் தொடங்­கினான்.பிரி­யங்­கா­வுகோ அந்த சம்­ப­வத்தை  நினைத்­ததால் துாக்கம் வர மறுத்­தது. தலை­யணை அன்று முதல் அவ­ளுக்கு  முட்­களாய் மாறி­யது. எப்­போதும் மழலை மொழியில் கொஞ்சி கொஞ்சி பேசி,புன்னகை என்னும் பொன் நகை­யினை அணிந்­தி­ருப்­ப­வளின் முகம் அன்று வாடியே  இருந்­தது. வேறு எதிலும் தன் சிந்­த­னையை செலுத்த முடி­ய­வில்லை. 

தையல்  வேலை­க­ளையும் ஒரு புறம் தள்­ளினாள்.மறுநாள் பகல் வேளையில் கண­னியின் முன்  அமர்ந்­த­வ­ளுக்கு மைக்­க­லிடம் இருந்து ஈமெயில் கடி­தங்கள் பல  வந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடிந்­தது. அவற்றில் பிரி­யங்­காவின்  மானத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் வித­மாக பல புகைப்­ப­டங்­கள்  இருந்­தன. அதில் தலை பகுதி மட்­டுமே பிரி­யங்­கா­வுக்கு  சொந்­த­மா­க­வி­ருக்க ஏனைய உடல் பாகங்கள் நிர்­வாண நிலை­யிலும், அரை குறை  ஆடை­க­ளு­டனும் இருக்கும் பெண்­களின் உடல் பாகங்­க­ளாக இருந்­தன. எனினும்  அது சிறிதும் சந்­தே­க­மின்றி பிரி­யங்­காவின் உட­ல­மைப்பை போன்­ற­தா­கவே  இருந்­தது.பிரி­யங்­கா­வுக்கோ அந்த நிலையில் அழக்  கூட சக்தி இருக்­க­வில்லை. “நான் எப்­படி அறி­யாத ஒரு­வ­ரிடம் சிக்கிக்  கொண்டேன். இனி என்ன செய்­வது இதை எப்­படி வேறொ­ரு­வ­ரிடம் கூறி உதவி  பெறு­வது" என்று ஒன்­றுமே அந்த சிறிய பெண்­ணுக்கு புரி­ய­வில்லை. 

கடை­சியில் தன்­னு­டைய உற்ற நண்­பி­யான நர்­ம­தா­விடம் சரி கூறுவோம் என்று தான் நடந்த அனைத்­தையும் ஒன்று விடாது நர்­ம­தா­விடம் தொலை­பே­சியில்  கூறினாள். அதன்பின் அன்­றைய தினமே பிரி­யங்­காவை சந்­திப்­ப­தாக பிரி­யங்­காவின் வீட்­டுக்கு வரு­கின்றாள் நர்­மதா வந்­தவள் உட­ன­டி­யாக மைக்­க­லிடம்  இருந்து வந்த ஈமெயில் மற்றும் அவ­னது போலி பேஸ்புக் கணக்­கி­னையும்  ஆராய்ந்து பார்க்­கின்றாள். அப்­போது இன்­னு­மொரு செய்­தி­யி­னையும் அவளால்  பார்க்க முடிந்­தது. அந்த புகைப்­ப­டங்­க­ளுக்கு கீழே "என்னை பற்றி நீ  யாரி­டமும் சொல்லக் கூடாது நீ தையல் வகுப்­புக்கு செல்லும் போது என்னை வந்து சந்­திக்க வேண்டும். நாங்கள் சந்­திக்கும் இடத்தை நான் உனக்கு பிறகு அறி­விக்­கின்றேன். நான் சொல்லும் இடத்­திற்கு மட்டும் நீ வரா­விட்டால்  இங்கு நீ பார்த்த அனைத்துப் படங்­க­ளையும் நான் இணை­யத்தில் பதி­வி­றக்கம்  செய்து விடுவேன்பின் உன் மேனி அழகை இந்த உல­கமே  பார்க்கும் என்று எல்லாம் அந்த ஈமெயில் கடி­தத்தில் பிரி­யங்­கா­விற்கு  அச்­சு­றுத்தல் விடுக்கும் வித­மா­க­வி­ருந்­தது.

 அந்த பின் நர்­மதா  "இனியும் நீ பொறுத்து பய­னில்லை எது நடந்­தாலும் பர­வா­யில்லை நடந்த  எல்­லா­வற்­றையும் உன் பெற்­றோ­ரிடம் சொன்னால் அவர்கள் உனக்கு உதவி  செய்­வார்கள் ” என்று அறி­வுரை வழங்­கி­விட்டு சென்­று­விட்டாள்.அன்று இரவு பெற்­றோர்கள் இரு­வரும்  வீட்­டுக்கு வரும் போது பிரி­யங்கா கடும் காய்ச்­ச­லினால் உடல்  நடுங்­க­முற்ற நிலையில் கம்­பளி போர்­வை­யினை இழுத்­துப்­போர்த்­தி­ய­வாறு  கட்­டிலில் படுத்­தி­ருந்தாள். பெற்றோர் இரு­வரும் அவள் அருகில் சென்று  விசா­ரிக்க பிரி­யங்கா நடந்த அனைத்­தையும் தன் தாயின் மடியில் தலையை  சாய்ந்து படுத்­த­வாறு கூறி முடித்தாள். பெற்றோர் இரு­வரும் அதி­க­மாக  பயந்­தாலும் அவற்றை பிரி­யங்­கா­விடம் காட்டிக்கொள்ளாமல் தனது மகளின்  அறியாமையினால் ஏற்பட்ட ஆபத்தில் இருந்து அவளைக் காப்பாற்ற எண்ணினார்கள்.அதன் பின் பெற்றோர் இருவரும் கணணி துரித  நடவடிக்கை பிரிவினருடன் தொடர்பு கொண்டு மகளின் பிரச்சினைக்கு தீர்வு காண  முற்பட்டார்கள்.

 அதன் படி இச்சம்பவம் தொடர்பாக இரகசியமான முறையில்  விசாரணைகளை முன்னெடுத்து தீர்வு கண்டார்கள்பிரியங்காவைப் போன்று பல பெண்கள் அறியாத  நபர்களுடன் பேஸ்புக் சமூக வலையமைப்பின் ஊடாக தொடர்பினை ஏற்படுத்தி உங்களை பற்றிய முழுமையான விபரங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனினும் ஒரு  விடயத்தில் கவனமாக இருக்கத் தவற வேண்டாம். பேஸ்புக்கில் இருக்கும் நபர்கள்  அனை வருமே உண்மையான நபர்கள் அல்ல. சமூக வலையமைப்புகள் இன்று உலகை சுருக்கிய  ஒரு கிராமமாக மாறி வருகின்ற போதும் எப்போதும் எச்சரிக்கையுடன் செயற்படுவது  வீண் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 

வசந்தா அருள் ரட்ணம் - வீரகேசரி
நன்றி  - ஜப்னா முஸ்லிம்.

Post a Comment

0 Comments