Subscribe Us

மாகாண சபை மீது வெறுப்பு! பாராளுமன்றத்தின் மீது ஈர்ப்பு!– தயாசிறி ஜயசேகர


நான் மாகாண சபை அமைச்சர்கள் நடந்து கொள்ளும் முறையில் வெறுப்படைந்துள்ளளேன். அதனால் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வட மேல் மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சத்கோரள சுதந்திர ஊடக கருத்துக்களத்தில் இடம் பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட அமைச்சர்க்ள மற்றம் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக மனவருத்தமடைந்துள்ளேன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..

ஆகவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நிச்சயமாக வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments