பைஷல் இஸ்மாயில் -
1988 ஆம் ஆண்டு அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நீண்டபட்டியலில் சுமார் 18 பொதுச் செயலாளர்கள் இருந்தார்கள். இவர்களுள் இன்றுவரைக்கும் உயிரோடு இருக்கும் மூவரில் ஒருவராக முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளராகவும் அதன் ஆரம்பகால கருத்தாக்களில் ஒருவராகதான் அன்றுமுதல் இன்றுவரை இக்கட்சியில் இருந்துகொண்டிருக்கின்றேன் “இன்றைய தினத்தை முஸ்லிம்களின் அரசியல் விடுதலை தினமாக மறைந்த தலைவர் அஷ்ரப் அன்று பிரகடனப்படுத்தினார் என அக்கட்சியின் ஸ்தாபகப் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமானமா றஊப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக் காரியாலயமான “தாறுஸ்ஸலாம்” கேட்போர் கூட மண்டபத்தில் அக்கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக 27 ஆண்டுகள் நிறைவுபெறுதை முன்னிட்டு நடைபெற்ற ஞாபகாரத்த சிறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் சட்டத்தரணி கபூர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
1980 ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக ஆரம்பிக்கப்பட்டு கிழக்கிலங்கையில் அதன் ஆரம்ப அறிமுக அரசியல் பணிகளை நாம் எல்லா ஊர்களிலும் முன்னெடுத்து சென்று கொண்டிருக்கும்போது இதனை மேலும் விரிவுபடுத்தி இன்று நாடு பூராகவும் விளம்பரப்படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்தை பெறுதற்கான சட்ட வரம்புகளுக்கமைவாக மீண்டும் 1986 ஆம் ஆண்டு கொழும்பு தலைநகரில் தேசிய அரசியல் கட்சியாக பிரகடனப்டுத்தினோம்.
அதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையாளருக்கு நாம் சமர்ப்பித்ததன் பேரில் 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இக்கட்சி இந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட முதற்கடிதம் இக்கட்சியின் அன்றைய செயலாளர் என்றவகையில் என் முகவரிக்கே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது என்ற தனது பழைய நீண்டகால அரசியல் வரலாற்று அனுபவப்பின்னணியையும் மறைந்த தலைவர் அஷ்ரப் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களையும் அவர் முகங்கொடுத்த சவால்களைப் பற்றியும் அன்றைய முஸ்லிம் அரசியல் வாதிகளால் மிகவும் ஏளனமாகவும் பகடியாகவும் விமர்சிக்கப்பட்ட ஒருவராக மறைந்த தலைவரும் கட்சியும் பார்க்கப்பட்ட பல கசப்பான காலங்கள் கடந்த காலங்களாகும் என்றார்.
0 Comments