இலங்கையின் கல்வித்துறையில் பல்கலைக்கழகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அவற்றுள் முஸ்லிம்களது பெரும்சொத்தாக தென்கிழக்குப் ப்கலைக்கழகம் கருதப்படுகிறது.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் அயராது உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் ,இன்று அதன் நோக்கம் மறந்து செயற்பட்டு வருகிறதுஎன்பது கசப்பான உண்மையாகும். முஸ்லிம்கள் கல்வியில் பொறுப்போடு செயற்பட்ட நிலைமாறி உலகலாபம் மற்றும் சுயநலத்துக்குத் துணைபோகும் நிலைமை உருவாகியுள்ளது. இவற்றில் புதிய அரசு நடவடிக்கையெடுக்க முன்வந்துள்ள அதேநேரம் அனைத்து முஸ்லிம் தலைமைகளும் அறிஞர்களும் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் மொத்தம் பதினைந்து பல்கலைக்கழகம் காணப்படும் நிலையில் தென்கிழக்கு பதினைந்தாவது இடத்தை எட்டியள்ளது என்பது அண்மைய கணக்கெடுப்பாகும்.
முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக்காணப்படும் தென்கிழக்கில் அதற்கேயுரிய சிறப்பியல்பாக அதிக அளவுக்குமீறிய விடுமுறை காணப்படுகிறது. கல்வி நடவடிக்கைகளில் பின்நிற்பது இன்னுமொன்றாகும். முஸ்லிம்களுக்கு சொந்தமான இச்சொத்தை தக்கவைத்துக்கொள்வது யாவரதும் பொறுப்பே.புதிய உபவேந்தருக்கான விண்ணப்பங்கள் கோரியுள்ள இக்காலகட்டத்தில் சகோதர மதத்தவர்களது தலையீட்டுக்கு முன் அதற்குப்பொருத்தமான தகுதியான திறமையான ஆளுமைமிக்க புத்திஜீவிகயை பொறுப்புக்கு அமர்த்துவதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பிரதேசவாதத்துவத்தைத் தாண்டி முஸ்லிம்கள் பலமாகச் செயற்படும்போது விளைவுகள் மாணவர்களுக்கே சாதகமாக அமையும்.
எனவே மாணவர்களாகிய நாம் மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். முன்னனிப் பல்கலைக்கழகங்களுக்குச் சவாழாக வெளியேறும் பட்டதாரிகளாக நாமும் வெளியேற விரும்புகறோம். இவ்விடயத்தில் எல்லாத் தரப்பும் கவனம் செலுத்தி மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதே எம் அனைவரினதும் அவா.அத்தோடு உங்களது துஆவும் சேர்த்தே...
இப்படிக்கு மாற்றத்தை விரும்பும்,
தீமா முஹம்மத்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
0 Comments