முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் நாடு முழுவதுமான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்காலை, மெதமுலனவில் நேற்று கட்சி முக்கியஸ்தர்களைச் சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, தாம் எக்காரணத்தை கொண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுப் போவதில்லை எனவும் அவர் தமக்கு நெருங்கிய கட்சி முக்கியஸ்தர்களிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments