லண்டனில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் உலகக் கிண்ண பாட்மின்டன் (பூப்பந்தாட்டப் போட்டி) போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் விண்ணப்பிக்குமாறு உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறை அமைப்பே உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையாகும்.
இப் போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் தங்களது விசா அனுமதிக்கான விண்ணப்பங்களை இம் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தினூடாக சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனைகளைப் பெறவிரும்புவோர் பின்வரும் தொலைபேசி பாலா 00 33 6 5147 5083, சிங்கம் 00 41 78 602 17 81, கிருபா 00 44 7891 110 979 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.


0 Comments